புதுச்சேரி : மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது.
மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாறன், செயலர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் காஞ்சனா வரவேற்று, ஆண்டு அறிக்கை வாசித்தார். மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியின் முதல்வர் மலர்க்கண் சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியின் பதிவாளர் தட்சணாமூர்த்தி, துறைத்தலைவர்கள் ஜெயகாந்தன், பத்மநாபன், சுரேஷ்குமார், ஜெகதீசன், பேராசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தாண்டு அரசு வாரியத் தேர்வில் மின்னியல் துறையை சார்ந்த சபரீஷ் 700க்கு 696 மதிப்பெண், மெக்கானிக்கல் துறையை சார்ந்த ஜெயப்பிரகாஷ் 700க்கு 695 மதிப்பெண், மின்னியல் துறையை சார்ந்த கிருஷ்ணா 700க்கு 694 மதிப்பெண், கம்ப்யூட்டர் துறையை சார்ந்த விக்னேஷ் 700க்கு 692 மதிப்பெண், மெக்கானிக்கல் துறையை சார்ந்த விஷால் 700க்கு 691 மதிப்பெண் பெற்றனர். இந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், வாரிய தேர்வில் 100 சதவீத தேர்ச்சி கொடுத்த விரிவுரையாளர்களுக்கு, கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மின்னியல் துறைத்தலைவர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.