கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2020ம் ஆண்டிற்கான விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.இந்த விருதுக்கு கலை, சமூகப்பணி, பொதுசேவை, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, அரசு குடிமைப் பணி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். பத்ம விருதுகளான, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் இந்திய அரசால் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது.எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்கள் பெற இணையதள முகவரியான www.padmaawards.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்க வேண்டும்.விருது தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலை பேசியிலோ தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.