கோவை:மேற்கு மண்டல மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை:மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை இருக்கும். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நாளை(இன்று), 25 மி.மீ., மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். குறிப்பாக தொண்டாமுத்துாரில், 39 மி.மீ., வரை மழை பொழிய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 31 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். காற்றின் வேகம், 18 கி.மீ., வரை இருக்கும். லேசான மழை எதிர்பார்க்கப்படுவதால், நெல் பயிர் நடவு செய்வதை தகுந்த வடிகால் வசதியுடன் தொடர வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.