அலங்காநல்லுார் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் எச்.சி.எல்., சார்பில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.
இதில் அலங்காநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். பள்ளியில் நடந்த பாராட்டு விழாவிற்கு தலைமை ஆசிரியை பிராகரன்ஸ் லதா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் மரியஜோசப் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் ஞானசேகர், உடற்கல்வி ஆசிரியர்கள் காட்வின், முத்துக்குமார், ஜெயபால் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.