கோயம்பேடு, கோயம்பேடில், குப்பை தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கியால் சலசலப்பு ஏற்பட்டது.கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே, நேற்று அதிகாலை மெட்ரோ ரயில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அங்கிருந்த குப்பை தொட்டியில் கைத்துப்பாக்கி ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், துப்பாக்கியை எடுத்து புதுப்பேட்டையில் உள்ள ஆயுத கிடங்கிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பரிசோதனை முடிவில், அது சினிமா படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 'டம்மி' துப்பாக்கி என தெரியவந்தது. இச்சம்பவத்தால் கோயம் பேடில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.