மொஹரம் தொழுகை நாகூர் தர்காவில் சர்ச்சை
மொஹரம் தொழுகை நாகூர் தர்காவில் சர்ச்சை

மொஹரம் தொழுகை நாகூர் தர்காவில் சர்ச்சை

Added : ஆக 10, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
நாகப்பட்டினம்: நாகூர் தர்காவில் மொஹரம் பண்டிகை, தொழுகை நடத்துவதில், இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், யாத்ரீகர்கள் குழப்பமடைந்தனர்.நாகை அடுத்த நாகூர் தர்கா புதிய நிர்வாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடால், மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்துவதில் பிரச்னை எழுந்தது.பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் தொழுகை நடத்துவது குறித்து,
மொஹரம் தொழுகை நாகூர் தர்காவில் சர்ச்சை

நாகப்பட்டினம்: நாகூர் தர்காவில் மொஹரம் பண்டிகை, தொழுகை நடத்துவதில், இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், யாத்ரீகர்கள் குழப்பமடைந்தனர்.

நாகை அடுத்த நாகூர் தர்கா புதிய நிர்வாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடால், மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்துவதில் பிரச்னை எழுந்தது.பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் தொழுகை நடத்துவது குறித்து, தர்கா நிர்வாகிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப், நாகை, ஆர்.டி.ஓ.,விடம் புகார் மனு அளித்தார்.இரு தரப்பினருக்கு இடையே, ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில், தர்காவின் பராம்பரியத்தை பாதுகாக்கவும், தர்காவின் உட்புறத்தில் வழிபாடு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.



இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் சார்பில், மொஹரம் தொழுகை ரத்து செய்யப்படுவதாக, தர்கா வளாகத்தில் துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் தர்காவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் டிரஸ்டிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் தலைமையில், தர்காவின் உட்புறம் உள்ள யாஹூசைன் பள்ளிவாசலில் மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தர்கா புதிய நிர்வாகிகள் கருத்து வேறுபாடால் வெளியூரில் இருந்து மொஹரம் சிறப்பு தொழுகையில் பங்கேற்க வந்த யாத்ரீகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (10)

ஸ்டிக்கன் 1 - al-kyyar,பஹ்ரைன்
10-ஆக-202213:14:55 IST Report Abuse
ஸ்டிக்கன் 1 நான் மதம் கடந்து தவறான கருத்து எழுத விழையவில்லை , ஆனால் சமீப காலமாக வன்முறை கறுத்தென்னம் கொண்ட சிலர் இப்படி இந்த மதத்திற்குள்ளே சிக்கலை ஏற்படுத்துவது முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும் என்பது எனது எண்ணம்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
10-ஆக-202211:05:53 IST Report Abuse
raja ஒருவேளை சியா சன்னி மோதலாக இருக்குமோ.....
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
10-ஆக-202212:16:56 IST Report Abuse
சீனிஉலகெங்கும் இருந்த சூஃபி ஞானிகள், வாஹாபிகளால் அழிக்கப்பட்டு விட்டனர், மிகச்சிலர் ஈரானில் உள்ளனர், இந்தியாவிலும் நிலைமை மாறி வருகிறது. நம்ம ஊர் பாஷையில் சொல்லவேண்டுமானால் சித்தர்கள். மதத்தை கடந்த சித்தர்களும் தற்போது இல்லை, சூஃபிகளும் இல்லை....
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-ஆக-202210:31:44 IST Report Abuse
Natarajan Ramanathan யாத்ரீகர் என்றால் அது ஹிந்து பக்தர்களை மட்டுமே குறிக்கும். வெளியூரில் இருந்து வந்த (வன்முறை)கும்பல் என்று போடவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X