வரி ஏய்ப்பு செய்தால் ஜி.எஸ்.டி., உரிமம் ரத்து
வரி ஏய்ப்பு செய்தால் ஜி.எஸ்.டி., உரிமம் ரத்து

வரி ஏய்ப்பு செய்தால் ஜி.எஸ்.டி., உரிமம் ரத்து

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை : ''வரி ஏய்ப்பில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் அவர்களின் ஜி.எஸ்.டி., உரிமம் ரத்து செய்யப்பட்டு, அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.வணிக வரித் துறையின் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுடனான சீராய்வு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.பின், அமைச்சர் மூர்த்தி அளித்த
வரி ஏய்ப்பு செய்தால் ஜி.எஸ்.டி., உரிமம் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ''வரி ஏய்ப்பில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் அவர்களின் ஜி.எஸ்.டி., உரிமம் ரத்து செய்யப்பட்டு, அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.



வணிக வரித் துறையின் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுடனான சீராய்வு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.பின், அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டி:அரசின் வரி வருவாயை உயர்த்தும் நோக்கில், கோட்ட வாரியாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அரசு பொறுப்பேற்ற பின், வணிக வரி வருவாய், 61 சதவீதமும், பத்திரப்பதிவு வருவாய், 70 சதவீதமும் உயர்ந்துள்ளது.


latest tamil news


நடப்பு நிதி ஆண்டில் வரி வருவாயை மேலும் உயர்த்த, அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் ஜி.எஸ்.டி., உரிமம் ரத்து, அபராதம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், வரி ஏய்ப்பில் ஈடுபட்டால், கடுமையாக நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

Visu Iyer - chennai,இந்தியா
13-ஆக-202214:20:21 IST Report Abuse
Visu Iyer வரி ஏய்ப்பில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் அவர்களின் ஜி.எஸ்.டி., உரிமம் ரத்து செய்யப்பட்டு, ///வரி அதிகம் என்பதால் தானே இவர்கள் ஏமாற்றுகிறார்கள்.. ஆக இதற்கு தீர்வு ரத்து செய்வது அல்ல.. வரிச்சுமையை குறைப்பது என்ற அடிப்படை கூட தெரியாதவர்களிடம் வரி மேலாண்மை இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
13-ஆக-202214:19:25 IST Report Abuse
Visu Iyer வரி ஏய்ப்பில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் அவர்களின் ஜி.எஸ்.டி., உரிமம் ரத்து செய்யப்பட்டு, ///ரத்து செய்தால் வேறு ஒருவர் பெயரில் தொழில் தொடங்க போகிறார்.. இதுவா தீர்வு.. /// என்ன செய்ய.. அறிவும் நிர்வாக திறமையும் உள்ள ஆட்சியாளர்கள் இல்லாதவரை இப்படி தான் இருக்கும்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
13-ஆக-202214:18:04 IST Report Abuse
Visu Iyer இனிமேல் ஏமாற்றியவர்களுக்கு சரி.. அப்பு இதுவரை ஏமாற்றியவர்களுக்கு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X