பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்குமான வித்தியாசத்தை நாடே பார்க்கிறது: ராகுல் விமர்சனம்
பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்குமான வித்தியாசத்தை நாடே பார்க்கிறது: ராகுல் விமர்சனம்

பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்குமான வித்தியாசத்தை நாடே பார்க்கிறது: ராகுல் விமர்சனம்

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (41) | |
Advertisement
புதுடில்லி: பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், ‛பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக்கொண்டு இருக்கிறது' என விமர்சித்துள்ளார்.கடந்த, 2002ல், குஜராத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பெரும் கலவரம் ஏற்பட்டது. ஏராளமானோர்
பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்குமான வித்தியாசத்தை நாடே பார்க்கிறது: ராகுல் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், ‛பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக்கொண்டு இருக்கிறது' என விமர்சித்துள்ளார்.



கடந்த, 2002ல், குஜராத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பெரும் கலவரம் ஏற்பட்டது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர். கோத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், பில்கிஸ் பானு என்ற பெண், வன்முறை கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது, 19 வயதான, பில்கிஸ் பானு, ஐந்து மாத கர்ப்பமாக இருந்தார். பில்கிஸ் பானுவின் குடும்பத்தினரும், இந்த கலவரத்தில் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றம், இரண்டு டாக்டர்கள், ஐந்து போலீசார் உட்பட, 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் குற்றவாளிகளுக்கான தண்டனையை உறுதி செய்தது.



latest tamil news

இந்த நிலையில், ஆயுள் தண்டனை பெற்ற 11 பேரையும், குஜராத் மாநில அரசு நேற்று முன்தினம் (ஆக.,15) விடுதலை செய்தது. இதற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் கண்டனம் தெரிவித்தார். அவர் தெரிவித்துள்ளதாவது: 5 மாத கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியைக் கொன்றவர்கள் 'சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா'வின் போது விடுவிக்கப்பட்டனர். 'பெண் சக்தி' பற்றி பேசுபவர்களால் நாட்டு பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கப்படுகிறது? பிரதமர் அவர்களே, உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இவ்வாறு ராகுல் விமர்சித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (41)

18-ஆக-202209:11:39 IST Report Abuse
பேசும் தமிழன் பப்பு.... குஜராத் கலவரத்தில் இறந்த இந்துக்கள் 3500 பேர்... முஸ்லீம்கள் 750 பேர்.... இப்போது சொல்லு கலவரம் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் யார்... இந்துகளா இல்லை முஸ்லீம்களா??? நீயே கான் குடும்பத்தை சேர்ந்தவன்.... காந்தி என்று போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறாய்
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
18-ஆக-202203:59:28 IST Report Abuse
Mohan ஆமா, பழைய பஞ்சாப் பிரதமர் சொல்லுக்கும் குஜராத் பிரதமர் செயலுக்குமான வித்தியாசத்தை உலகமே பாக்குது.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
18-ஆக-202200:10:34 IST Report Abuse
Aarkay கரீபி ஹடாவோ என்று உங்கள் பாட்டி நாட்டிற்கு சொன்ன சொல்லுக்கும், அவர் தன் குடும்பத்தின் பத்து இருபது தலைமுறைக்குமாய் சேர்த்து கரீபி ஹடாவோ செய்ததற்கும் சம்பந்தம் உண்டா பப்பு? என்னவோ இவர்கள் சொன்ன சொல் தவறாத ஹரிச்சந்திரர்கள் போல.... இப்படி பிதற்றி பிதற்றியே சட்டை கிழித்துக்கொள்ளப்போவதுதான் மிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X