காத்மாண்டு:நேபாளில் முதல் தாய்ப்பால் வங்கியை அந்நாட்டு ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி திறந்து வைத்தார்.
குறைமாதத்தில் பிறந்த மற்றும் ஆபத்தான நிலையில் இருக்கும் பச்சிளங் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக, தாய்ப்பால் வங்கி உலகம் முழுதுமே செயல்படுகின்றன. நம் அண்டை நாடான நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி நேற்று துவக்கப்பட்டது. தலைநகர் காத்மாண்டு நகரில் பரோபகார் மகப்பேறு மருத்துவமனையில் 'யுனிசெப்' உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் வங்கியை, அந்நாட்டு ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி திறந்து வைத்தார்.