ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் லியோனி மீது நடவடிக்கை: எச்.ராஜா வலியுறுத்தல்

Added : ஆக 22, 2022 | கருத்துகள் (68) | |
Advertisement
சிங்கம்புணரி : ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேசி வரும் லியோனியை தமிழ்நாடு பாடநுால் நிறுவன பொறுப்பிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும்,'' என, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா வலியுறுத்தினார்.அவர் மேலும் கூறியதாவது: தி.மு.க., அரசு தீய சக்திகளை அரசு பொறுப்பில் நியமித்து அவர்கள் மூலம் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி வருவது
ஹிந்து, லியோனி, எச் ராஜா , H Raja,Leoni, Hindu, I Leoni, Dindigul I Leoni,DMK, BJP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிங்கம்புணரி : ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேசி வரும் லியோனியை தமிழ்நாடு பாடநுால் நிறுவன பொறுப்பிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும்,'' என, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது: தி.மு.க., அரசு தீய சக்திகளை அரசு பொறுப்பில் நியமித்து அவர்கள் மூலம் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. லியோனி போன்றவர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும். இதை செய்தால் தான் முதல்வர் நாகரீகமானவர் என மக்கள் கருதுவர். தவறினால் அவர் கூறி தான் இதெல்லாம் நடப்பதாக மக்கள் நினைப்பர்.



தி.மு.க., ஹிந்து விரோத கட்சி மட்டுமல்ல தேசவிரோத கட்சியும் கூட. ஹிந்து முன்னணி நிர்வாகி கனல்கண்ணனை கைது செய்த தமிழக அரசு நடராஜபெருமானை அவதூறாக பேசிய யூடியூப் புரூட்டர்ஸ் மைனர் விஜயை ஏன் கைது செய்யவில்லை.ஆளுங்கட்சி எடுபிடியாக போலீஸ் துறை செயல்படுகிறது. ஹிந்து மதத்தை இழிவுபடுத்துபவரை போலீசார் கைது செய்வதில்லை. இதில் உள்நோக்கம் இருக்கிறதா என விசாரிக்க வேண்டும்.


latest tamil news


வெளிநாட்டில் இரண்டு கம்பெனிகளை காலி செய்து விட்டு இங்கு வந்தவர் தான் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன். தமிழகத்தை திவாலாக்க முடிவு செய்து 15 மாதங்களில் ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார். மின் துறையில் வேலையாட்களை காலி செய்து விட்டு மின் கணக்கீடுக்கு ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்துள்ளனர்.



கணக்கெடுப்புக்கு செல்லாமல் கணக்கிடுகிறார்கள். கால்நடைகளுக்கான அனைத்து தீவனங்களும் விலை உயர்ந்துள்ள நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் விவசாயிகளின் வயிற்றில் அடித்து, விவசாயிகளின் விரோதியாக தி.மு.க., அரசு செயல் படுகிறது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (68)

Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
22-ஆக-202218:42:43 IST Report Abuse
Palanisamy T @ Mutu Thirunelveli .- உங்களின் நல்ல எண்ணங்கள் புரிகின்றது. உங்களின் கோரிக்கை நடைமுறைக்கு ஏற்றதல்ல. நீங்கள் குறிப்பிட்டது தமிழகத்தை மட்டும் தான். மத்திய அரசு அப்படி ஒரு மாநிலத்துக்காக மட்டும் செயல்பட முடியாது. இது நடைமுறைக்கு ஏற்றதல்ல. BJP தமிழகத்தில் நுழைவது நாளைய தமிழர்களுக்கும் ஏற்றதல்ல. மேலும் திராவிடக் கட்சிகளிரண்டும் இன்றைய நிலையில் நல்ல அரசியல் கட்சிகளாக செயல்படவில்லை நம்பிக்கைக்குரிய கட்சிகளாகவும் செயல்படவுமில்லை. அண்ணா எம்ஜிஆருக்குப் பிறகு இந்த கட்சிகளுக்கு இருந்த மரியாதையும் போய்விட்டது. தமிழ் தமிழ், திராவிடம் திராவிடமென்றுச் சொல்லியே மக்களை இன்றும் ஏமாற்றிக் கொண்டிருக் கின்றார்கள். இப்போது காலம் மாறி விட்டது. இது தகவல்கள் சுடச் சுட அறிகின்ற காலம் சுடச் சுட பயணம் செய்யும் காலம். பெரும்பான்மையான வாசகர்களின் கருத்துக்கள் இந்த திராவிடக் கட்சிகளுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் எதிராகவேயுள்ளன. மாற்றுக் கட்சியாக அவர்கள் BJP யை தவறாக நாடுகின்றார்கள். இதை இந்த திராவிட பகுத்தறிவு ஜென்மங்கள் இப்போதே உணர்ந்தாள் அவர்களுக்கு நல்லது. இல்லாவிட்டால் கண் கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரமா
Rate this:
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
22-ஆக-202218:20:08 IST Report Abuse
K. V. Ramani Rockfort ஹ. ராஜா ஒரு வக்கீல்தானே, இவர் மீது ஏன் தகுந்த பிரிவில் வழக்கு பதிவு செய்யலாமே
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
22-ஆக-202217:14:54 IST Report Abuse
Raj .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X