2வது நாளாக பங்குச்சந்தைகள் வீழ்ச்சி : சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு

Updated : ஆக 22, 2022 | Added : ஆக 22, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம், இன்று 2வது நாளாக கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இன்றைய (ஆக.,22) வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 352 புள்ளிகள் சரிந்து, 59,293 புள்ளிகளுடன், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 114 புள்ளிகள் சரிந்து 17,644 புள்ளிகளுடன் துவங்கியது. அதானி ஸ்போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் உயர்வு கண்டன.
2வது நாளாக பங்குச்சந்தைகள் வீழ்ச்சி : சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு

மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம், இன்று 2வது நாளாக கடும் வீழ்ச்சியை சந்தித்தன.



இன்றைய (ஆக.,22) வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 352 புள்ளிகள் சரிந்து, 59,293 புள்ளிகளுடன், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 114 புள்ளிகள் சரிந்து 17,644 புள்ளிகளுடன் துவங்கியது. அதானி ஸ்போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் உயர்வு கண்டன. விப்ரோ, கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் சரிவு கண்டன.

எஃப்.எம்.சி.ஜி, பவர் சார்ந்த பங்குகளை தவிர அனைத்து பங்குகளும் சரிவை கண்டன. நண்பகல் 12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 625 புள்ளிகளும், நிஃப்டி 187 புள்ளிகளும் சரிந்து வர்த்தகமாகி வருகிறது.


வீழ்ச்சிக்கு காரணம் என்ன ?



பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த கூடுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் உலக பங்குச்சந்தைகளை சரிவை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஐரோப்பிய மற்றும் சீன பொருளாதார மந்தநிலை ஏற்பட கூடுமென அச்சம் காரணமாக, டாலரின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.


latest tamil news

டாலர் குறியீடு மதிப்பு 108 க்கு மேல் சென்றுள்ளது. மறுபுறம் 10 ஆண்டு அமெரிக்க பத்திரங்கள் 2.588 சதவீதத்திற்கு எதிராக 2.98 சதவீதமாக முதிர்வடைகிறது. இது சந்தைக்கு பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.


இதனிடையே , மும்பை பங்குச்சந்தையின் மூலதனசந்தை மதிப்பு, தற்போதைய சரிவால், ரூ. 4.91 லட்சம் கோடி குறைந்து, ரூ.275.61 லட்சம் கோடியாக உள்ளது. ஆக.18ம் தேதி மூலதனசந்தை மதிப்பு ரூ.280.52 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-ஆக-202214:18:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கை ..
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-ஆக-202215:01:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்சார்ட்டை தலைகீழா காட்டி நிதிமந்திரி பெருமிதம் கொள்ளலாம். இல்லாட்டி யோகா தினத்தன்று சிரசாசனம் பண்ணும் போது பார்த்து நமோ புல்லரிக்கலாம். நமோ வேங்கடரமணா, கோவிந்தா கோ..விந்தா.....
Rate this:
அருணாசலம், சென்னை, நாளை சந்தை புள்ளிகள் ஏறும் போது என்ன சொல்வாய்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X