போதையில் 'மட்டையான' ஓட்டுநர்: பஸ்சை இயக்கிய நடத்துனர்: இருவரும் 'சஸ்பெண்ட்'

Added : ஆக 22, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
வந்தவாசி: திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்சை மது போதையில் இயக்கிய ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பஸ்சை நடத்துனர் இயக்கியுள்ளார். இச்சம்பவத்தில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.திருப்பதியிலிருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்சை ஓட்டுநர் தரணேந்திரன் இயக்கி வந்தார். சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பஸ்சை ஓட்டுநர் சற்று
மதுபோதை, அரசு பஸ், ஓட்டுநர், நடத்துனர், சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வந்தவாசி: திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்சை மது போதையில் இயக்கிய ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பஸ்சை நடத்துனர் இயக்கியுள்ளார். இச்சம்பவத்தில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.



திருப்பதியிலிருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்சை ஓட்டுநர் தரணேந்திரன் இயக்கி வந்தார். சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பஸ்சை ஓட்டுநர் சற்று தடுமாற்றத்துடன் இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி வருவதற்குள் பல்வேறு இடங்களில் தாறுமாறாக இயக்கபட்டதால் சந்தேகம் அடைந்த பயணிகள், ஓட்டுநர் மதுபோதையில் பஸ்சை இயக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால், நடத்துனர் ஹோலிப்பேஸிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



latest tamil news

இதனையடுத்து ஓட்டுநரை எழுப்பிவிட்டு நடத்துனர் பஸ்சை இயக்கியுள்ளார். பயணிகள் தொடர்ந்து கூச்சலிட்டதால், வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் பஸ்சை நிறுத்தினார். பின்பு, ஓட்டுநரை கீழிறக்கி வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து அங்கு வந்த வந்தவாசி போலீசாரிடம் தரணேந்திரனை ஒப்படைத்தனர். மதுபோதையில் ஓட்டுநர் பஸ்சை இயக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் தரணேந்திரன் மற்றும் அனுமதியின்றி பஸ்சை இயக்கிய நடத்துனர் ஹோலிப்பேஸ் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

22-ஆக-202221:19:02 IST Report Abuse
அப்புசாமி ஹி..ஹி.. நிறைய ஓட்டுனர்களுக்கு சரக்கு அடிச்சாத்தான் ஸ்டெடியா ஓட்ட முடியும். இல்லேன்னா கை நடுங்கும். நேத்திக்கி அடிச்ச சரக்கே டூப்ளிகேட்டா இருக்கும்.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் இது புதுச்சேரி அரசு பஸ்!! புத்சேரியில் யார் ஆட்சி??? இது கூட தெரியாமல் தள்ளபதியை திட்டி கருத்து போட வந்து விட்டார்கள்!!!
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
22-ஆக-202223:05:24 IST Report Abuse
கல்யாணராமன் சு.அண்ணே, பச்சையப்பன் அண்ணே, அந்த போட்டோவில "...வரத்து கழகம் விழுப்புரம்" போட்டிருக்குதே .... புதுச்சேரி பஸ் விழுப்புரத்திலிருந்தே இயங்குதா ? இல்லே விழுப்புரத்தை புதுச்சேரிக்கு தாரை வாத்துட்டிங்களா ?...
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
22-ஆக-202217:17:06 IST Report Abuse
a natanasabapathy Muthanmai maanilam aakum yenru sonnom allavaa .ithil thaan muthanmai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X