டில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்

Updated : ஆக 22, 2022 | Added : ஆக 22, 2022 | கருத்துகள் (41) | |
Advertisement
புதுடில்லி: பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து டில்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் நடந்தது.மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் டில்லி எல்லையில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு கடந்த
டில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து டில்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் நடந்தது.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் டில்லி எல்லையில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவித்ததால், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.



latest tamil news

எனினும், வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்தும், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து டில்லி ஜந்தர் மந்தரில் இன்று முதல் போராட்டம் நடத்தப்படும் என 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக் கிசான் மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.



latest tamil news

இதனையடுத்து உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டில்லி நோக்கி படையெடுத்தனர். போராட்டம் அறிவிப்பை அடுத்து, டில்லி - ஹரியானா எல்லையான திக்ரி, டில்லி - மீரட் சாலை, சிங்கு எல்லை, காசிப்பூர் ஆகிய இடங்களில் டில்லி போலீசார் சிமென்ட் தடுப்புகளை ஏற்படுத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், காசிப்பூரில் பாரதிய கிஷான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத்தை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



தடுப்புகளை மீறி டில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர். போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் நடத்துவதால் பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (41)

23-ஆக-202207:08:08 IST Report Abuse
சந்திரசேகர் விவசாய கடன் தள்ளுபடி என்பது இப்போது பேஷனாகி விட்டது. அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை தான் தள்ளுபடி செய்வார்கள். தேர்தல் வந்தால் தள்ளுபடி இல்லையென்றால் தள்ளுபடி இல்லை. அடுத்த தடவை விவசாய கடன் தள்ளுபடி செய்யும் போது ஏற்கனவே அந்த நபர் விவசாய கடன் தள்ளுபடி செய்யபட்டிருந்தால் அந்த நபருக்கு தள்ளுபடி செய்ய கூடாது. இதில் ஒரு வருத்தம் என்னவென்றால் நல்லா செழிப்பா இருக்கும் விவசாயிகளுக்கு கூட தள்ளுபடி பண்றது.
Rate this:
Cancel
Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா
23-ஆக-202200:11:52 IST Report Abuse
Jayaraman Pichumani இந்த முறையாவது எடுத்த எடுப்பிலேயே அடித்து விரட்ட வேண்டும்.
Rate this:
Cancel
HoneyBee - Chittoir,இந்தியா
22-ஆக-202221:45:42 IST Report Abuse
HoneyBee அரவிந்த் கெஜ்ரிவாலின் குஜராத் எலெக்ஷன் நாடகம் தான் இது .... வேறு வேலை இல்லை இவனுக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X