கலெக்டரால் கண் கலங்கிய கர்ப்பிணியர்: ‛உங்கள் சகோதரன் நான்' கலெக்டர் நெகிழ்ச்சி

Updated : ஆக 25, 2022 | Added : ஆக 25, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
நாகப்பட்டினம்--நாகையில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், பங்கேற்ற 500 கர்ப்பிணியருக்கும் சீர்வரிசை பொருட்களை வழங்கி, கலெக்டர் ஆசீர்வதித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.நாகையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், மும்மதத்தைச் சேர்ந்த 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் அருண் தம்புராஜ், டி.ஆர்.ஓ., ஷகிலா,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாகப்பட்டினம்--நாகையில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், பங்கேற்ற 500 கர்ப்பிணியருக்கும் சீர்வரிசை பொருட்களை வழங்கி, கலெக்டர் ஆசீர்வதித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



latest tamil news



நாகையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், மும்மதத்தைச் சேர்ந்த 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் அருண் தம்புராஜ், டி.ஆர்.ஓ., ஷகிலா, நாகை மாலி எம்.எல்.ஏ., பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் அருண் தம்புராஜ், கர்ப்பிணி தாய்மார்களிடம், 'நான் உங்கள் சகோதரனாக வந்துள்ளேன்' என்றார்.

500 பெண்களுக்கும் தனித் தனியாக, டி. ஆர். ஓ., ஷகிலா மற்றும் சமூக நலத்துறை அலுவலர் தமிமுன் நிஷா ஆகியோரை வளையல்கள் அணிவிக்க செய்து, சந்தனம் பூச செய்தார்.பின், அவர்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி, மலர் துாவி ஆசீர்வதித்தார். தொடர்ந்து அனைவருக்கும் ஐந்து வகையான உணவு பரிமாறினார். அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகளை கேட்டறிந்து கலெக்டர் பரிமாறினார்.

அப்போது, பெரும்பாலான கர்ப்பிணி தாய்மார்களின் கண்கள் கலங்கியிருந்தன.கர்ப்பிணியர் கூறுகையில், 'வழக்கமாக மேடை நிகழ்ச்சியாக நடத்தப்படும் இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்கள், மைக்கில் வாழ்த்தி விட்டு, சிலருக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி விட்டு செல்வர்.


latest tamil news


'ஆனால் சம்பிரதாய முறைப்படி, எங்களின் சகோதரனாக கலெக்டரே, ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக வளைகாப்பு நடத்தி, சீர்வரிசை வழங்கி, பாசத்துடன் உணவு பரிமாறியது வாழ்க்கையில் மறக்க முடியாதது.'கலெக்டர் வழங்கியதை எங்கள் தாய் வீட்டு சீதனமாக கருதுகிறோம். எங்களுக்கு சகோதரனாக, நாங்கள் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமனாக கலெக்டர் காட்டிய அன்பு, எங்களின் கண்களை குளமாக்கி விட்டது' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

duruvasar - indraprastham,இந்தியா
25-ஆக-202214:08:00 IST Report Abuse
duruvasar பிரசவம் வரை தாய்மாமன் அங்கிருப்பாரா அல்லது வெளியூருக்கு சென்று விடுவாரா என்பது 48 மணி நேரத்திற்க்கு பிறகுதான் எதுவும் சொல்லமுடியும்.
Rate this:
Cancel
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
25-ஆக-202212:26:56 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman பாத்து தம்பு சார். நடப்பு மாடல்ல இந்த மாதிரி கலெக்டர் தம்பட்டம் அடிக்கறது நல்லதல்ல. ஒரு மந்திரி செய்வது தான் ஒப்புக்கொள்ள கூடியது. எதற்கும் பெட்டி, படுக்கையுடன் ரெடியாயாக இருக்கவும்.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
25-ஆக-202210:19:18 IST Report Abuse
sankaranarayanan கலெக்டருக்கு வேறு வலையே கிடையாதா? முன்பு இதேபோன்று முன்பு நிதி அமைச்சர் ஜி.எஸ்,டி. கவுன்சில் கூட்டத்திற்கு செல்லாமல் யாருக்கோ வளைகாப்பிற்கு சென்றதுதான் நினைவிற்கு வருகிறது.
Rate this:
Girija - Chennai,இந்தியா
25-ஆக-202213:23:07 IST Report Abuse
Girijaகலெக்டரின் வேலையில் ஒன்று தான் இது . தாய் சேய் நலன் , பிரசவத்தின் போது இறப்பது தாய் சேய் இறப்பது போன்றவற்றை தவிர்ப்பது, ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்கு என்று பலநல திட்டங்கள் உள்ளது இதை மத்திய அரசு ,சிற்றூர் அரசு, உலக சுகாதார நிறுவனம் கண்காணிக்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் வளர்ந்த நாடுகள் ஏழ்மை நாடுகளுக்கு உதவி செய்கிறது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X