சென்னை: தகைசால் தந்தையே! தன்னிகரற்ற தலைவரே! முதல்வர்களில் மூத்தவரே! கலையுலக வேந்தரே!. உங்கள் சொல்படி நடப்பதால் வென்றபடியே இருக்கிறேன்' என கருணாநிதியை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தகைசால் தந்தையே! தன்னிகரற்ற தலைவரே! முதல்வர்களில் மூத்தவரே! கலையுலக வேந்தரே!. ஒவ்வொரு அடியும், நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன்.
அதனால் தான் வென்றபடியே இருக்கிறேன். தாங்கள் வகித்த திமுக தலைவர் பொறுப்பில் நான் 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மரியாதை
முன்னதாக, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.