சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து இன்று (ஆக.28 ம் தேதி) ஒரே நாளில் 525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 28) 525 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,67,160 ஆக அதிகரித்துள்ளது. இன்று 596 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,23,858 ஆக உயர்ந்து உள்ளது. இன்று ( ஆக.,28) கோவிட் பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லாததால் எண்ணிக்கை 38,034 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு குறைவாக காணப்பட்டது. நேற்று (ஆக.,27ம் தேதி ) 87 ஆக இருந்த நிலையில் இன்று (ஆக., 28 ம் தேதி) சென்னையில் 83 ஆக குறைந்து உள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,268 ஆக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல்

