வாடகை ஆட்டோவுக்கு அரசு செயலி: தமிழக போக்குவரத்து துறை முயற்சி

Updated : ஆக 29, 2022 | Added : ஆக 29, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
சென்னை--வாடகை ஆட்டோக்களை ஒருங்கிணைக்கும் வகையில், அரசு சார்பில் செயலி உருவாக்கும் பணியில், தமிழக போக்கு வரத்து துறை ஈடுபட்டு உள்ளது.தமிழகத்தில் ஆட்டோக்களில் பயணம் செய்வோரிடம், நேரம், துாரத்துக்கு ஏற்ப பலவகையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் செயலி வழியாக இயங்கும் ஆட்டோக்களை, வாடிக்கையாளர்கள் தேடிச் செல்கின்றனர்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை--வாடகை ஆட்டோக்களை ஒருங்கிணைக்கும் வகையில், அரசு சார்பில் செயலி உருவாக்கும் பணியில், தமிழக போக்கு வரத்து துறை ஈடுபட்டு உள்ளது.தமிழகத்தில் ஆட்டோக்களில் பயணம் செய்வோரிடம், நேரம், துாரத்துக்கு ஏற்ப பலவகையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் செயலி வழியாக இயங்கும் ஆட்டோக்களை, வாடிக்கையாளர்கள் தேடிச் செல்கின்றனர்.



latest tamil news


வலியுறுத்தல்



அந்த நிறுவனங்களும், நெரிசல் நேர கட்டணம், காத்திருப்பு கட்டணம், ரத்து கட்டணம் என, பல வித கட்டணங்களை வசூலிக்கின்றன. இவை ஒரே மாதிரியாக இல்லாததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆட்டோக்களை இணைத்த போது குறிப்பிட்ட கமிஷன் தந்த அந்த நிறுவனங்கள், நாளடைவில் கமிஷனை குறைப்பது; நெடுந் தொலைவில் இருந்து சவாரி ஏற்றச் சொல் வது; தொடர்ந்து அதிக சவாரிகளை ஏற்ற நெருக்கடி தருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாகவும், ஓட்டுனர்கள் புகார் கூறி வருகின்றனர்.இந்நிலையில், தமிழக அரசே செயலியை உருவாக்கி, குறைந்த கமிஷன் தொகையுடன், ஒரே மாதிரியான மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்தால், பயணியருக்கும், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களுக்கும் லாபகரமாக இருக்கும் என, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.



மேலும், இதற்கான செலவுக்கு, ஆட்டோ தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள தொகையை செலவழிக்கலாம்; தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, குறிப்பிட்ட தொகையை பிடிக்கலாம் என்றும், அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.அடுத்த மாதம், 13ம் தேதிக்குள், கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும்; ஆட்டோக்களுக்கான அரசு செயலியை உருவாக்க வேண்டும்.



ஆட்டோ தொழிலாளர்களை, நலவாரியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, போக்குவரத்து துறை கமிஷனரிடமும் அளித்துள்ளனர்.கோரிக்கைகளை ஏற்கா விட்டால், அடுத்த மாதம், 13ம் தேதி, மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.



latest tamil news

முடிவு



இந்நிலையில், கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் உள்ள, 70 ஆட்டோக்களை இணைத்து, கேரள அரசு, 'சவாரி' என்ற செயலியை உருவாக்கியது. இது, பொதுமக்களிடமும், ஆட்டோ ஓட்டுனர்களிடமும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை ஆராய, தமிழக அரசு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.அதிலுள்ள நிறை, குறைகளின் அடிப்படையில், விதிகளையும், செயலியையும் உருவாக்கும் பணியில், கூடுதல் போக்குவரத்து கமிஷனர் மனக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டுஉள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24)

30-ஆக-202204:59:22 IST Report Abuse
ராஜா இனிமேல் ஓலா, ஊபர் போன்றவர்களுக்கு வாழ்வு தான். ஆட்டிக்கரர்கள் அரசு செயலியை விட்டுவிட்டு அங்கே ஓடுவார்கள்.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
29-ஆக-202221:05:40 IST Report Abuse
sankaranarayanan இந்தியாவிலேயே திராவிட மாடல் தமிழ் நாட்டில் மட்டும்தான் இந்த அலங்கோலம் - ஆட்டோவில் மீட்டர் இருக்கும் ஆனால் வேலை செய்யாது. அது எட்டாவது அதிசியசம். கின்னத் புத்தகத்தில் எழுத வேண்டிய தருணம் வந்தாகிவிட்டது. இப்போது. அந்த மீட்டர் ஒரு பொழுதுபோக்கு பொம்மையாக ஆட்டோவில் இருக்கும். சிலர் அதை துணியால்கூட மூடிய வைப்பதுண்டு. ஆட்டோ ஸ்டாண்டுக்கு பயணிகள் வந்தவுடன், அந்த இடம் செல்ல வேண்டுமென்றால், அந்த ஆட்டோக்காரர் அவரிடம் எவ்வளவு கொடுப்பிங்க? என்பார். எதோ அந்த ஆட்டோ அந்த பிரியாணியை சேர்ந்ததுபோல. பிறகு ஒரு தொகை சொன்னவுடன் கூட இவ்வளவு போட்டு கொடுங்க என்பார் ஆட்டோ காரர். தலை விதியே என்று குமரிக்கொண்டு பிரயாணி அந்த ஆட்டோவில் சென்றால் பாதியிலேயே அது நின்று டாப் டாப் என்று பெரும் சப்பாததுடன் வெடிக்கும். பிறகு செல்லவேண்டிய இடம் சென்று, அப்பாடா வந்து சேர்ந்தாகிவிட்டது என்று பெருமூச்சு விடுவார் இதுதான் தமிழ்நாட்டின் தலைவிதி. உலகிலேயே எங்குமே இல்லாத போக்குவரத்து.
Rate this:
Cancel
29-ஆக-202220:10:18 IST Report Abuse
ஆரூர் ரங் கோர்ட் உத்தரவுப்படி எல்லா ஆட்டங்களிலும் அரசு செலவில் GPS, மின்னணு மீட்டர் கட்டாயமாக்கி 12 ஆண்டுகளாகிறது . இன்னும் அமல்படுத்தவில்லை. மினிபஸ் அதிகம் விட்டால் மட்டுமே இவர்களது கொட்டம் அடங்கும். ஆனால் ஆட்டோக்காரர்கள்🙃🙃 வாக்கு வங்கி காலியாகிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X