ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை: செப்.,5க்கு ஒத்திவைப்பு

Updated : ஆக 30, 2022 | Added : ஆக 29, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி: கர்நாடக அரசு, பள்ளி, கல்லுாரிகளில் ஹிஜாப் அணிய விதித்திருந்த தடை உத்தரவை உறுதி செய்த, உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து, முஸ்லிம் மாணவியர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த, மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை செப்.,5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.பள்ளி, கல்லுாரிகளில் முஸ்லிம் மாணவியர் 'ஹிஜாப்' எனும் முகம் மற்றும் தலைப்பகுதியை மறைக்கும் வகையில், உடை
Hijab, SC, Supreme Court, ஹிஜாப், மேல்முறையீட்டு, வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

புதுடில்லி: கர்நாடக அரசு, பள்ளி, கல்லுாரிகளில் ஹிஜாப் அணிய விதித்திருந்த தடை உத்தரவை உறுதி செய்த, உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து, முஸ்லிம் மாணவியர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த, மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை செப்.,5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



பள்ளி, கல்லுாரிகளில் முஸ்லிம் மாணவியர் 'ஹிஜாப்' எனும் முகம் மற்றும் தலைப்பகுதியை மறைக்கும் வகையில், உடை அணிந்து, வகுப்புகளுக்கு வருவதற்கு, கர்நாடக அரசு தடை விதித்திருந்தது; சீருடையை கட்டாயமாக்கியது. அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி, சில முஸ்லிம் மாணவியர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், 'கல்வியில் மதம் நுழையக்கூடாது. சமத்துவத்தை உணர்த்தும் வகையில், சீருடை அணிய வேண்டும் என்ற, அரசின் உத்தரவு சரிதான். அதை மாணவியர் பின்பற்ற வேண்டும்' என, மார்ச் 15ல் தீர்ப்பளித்தது.



latest tamil news

இது குறித்து கேள்வியெழுப்பி, உச்சநீதிமன்றத்தில் மாணவியர் குழு, மேல் முறையீடு செய்துள்ளது. இதில் 'கர்நாடக உயர்நீதிமன்றம், மாணவியரின் மனதை புரிந்து கொள்வதில் இடறியுள்ளது. சூழ்நிலையின் தீவிரத்தை உணரவில்லை.


இஸ்லாம் மதம் நடைமுறையில், ஹிஜாப் அணிவது அவசியம்' என, கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா அமர்வு முன் இன்று நடைபெற்றது. அப்போது, ஹஜாப் அணியத் தடை விதித்தது தொடர்பாக கர்நாடக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இவ்வழக்கின் விசாரணையை செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

sunny raja -  ( Posted via: Dinamalar Android App )
29-ஆக-202220:31:18 IST Report Abuse
sunny raja சீக்கிய மதத்தில் இருப்பது போல் இசுலாம் தனது குரானில் தலைக்கவசம் அவசியம் என்று கூறவில்லை.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
29-ஆக-202220:19:23 IST Report Abuse
GMM பள்ளி, கல்லூரி படிப்புக்கும் மாணவ மாணவிகள் மற்றும் போலீஸ், ராணுவ பணியில் இருக்கும் சேவகர்களுக்கு பொது சீருடை முக்கியம். நீதி மன்றத்தில் நீதிபதிகள், வக்கீல்கள் சீருடையில் தான் உள்ளனர். ஹிஜாப் மத அடிப்படையில் உள்ள தனிப்பட்ட ஆடை முறை. இது பொது இடங்களில் கூடாது. திருமணத்தில் தாலி தனிப்பட்ட சடங்கு. அனைவருக்கும் பொருந்தாது. இதை அரசு கட்டாய படுத்துவதும் இல்லை. இந்தியாவில் பௌத்த, ஜெயின்... போன்ற சிறுபான்மை மக்கள் ஒன்றுபட்டு வாழ்கிறார்கள். எந்த வழக்கும் நீதிமன்றம் வருவது இல்லை. இந்த மேல் முறையீடு மனு பொது சிவில் சட்ட அவசியத்தை நினைவூட்டுகிறது.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
31-ஆக-202210:53:29 IST Report Abuse
NicoleThomsonபுரிந்து ..... செய்தி சிறப்பு...
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
29-ஆக-202220:14:41 IST Report Abuse
NicoleThomson எங்கப்பா திராவிட கழக நாத்திகம் பேசும் கும்பல்? செக்யுலர் கும்பல்? அந்த யூடுப் கருப்பு சட்டை போட்ட ...,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X