நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா: விழாக்கோலம் பூண்டது சென்னை!

Updated : ஆக 31, 2022 | Added : ஆக 31, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: நாடு முழுதும் இன்று (ஆக.,31) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக, 2021ல், விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது. அதேபோல, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும்
நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா: விழாக்கோலம் பூண்டது சென்னை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: நாடு முழுதும் இன்று (ஆக.,31) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக, 2021ல், விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது. அதேபோல, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டவில்லை. தனி நபர்கள் தங்களின் வீடுகளில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதற்கும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது தடைகள் நீங்கியுள்ளன. ஹிந்து அமைப்பினர், தங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் சிலைகளை நிறுவி, ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 501 சிலைகள் வைக்கப்பட உள்ளன.


latest tamil news


பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும் விசர்ஜன விழா அவரவர் விருப்பத்திற்கு இணங்க வருகிற 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா 4ஆம் தேதி நடைபெற உள்ளது. விநாயகர் சிலை வைத்து வழிபடுதலுக்குப் பின்பு அவற்றை பாலவாக்கம், பட்டினம்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய நான்கு கடற்கரைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டுமென சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Sudhaker Mani - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஆக-202209:58:46 IST Report Abuse
Sudhaker Mani மிக சிறப்பு, தினம் மலரும் தினமலருக்கும் மற்றும் நம் வாசகர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
RAGOUBATHI - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஆக-202209:32:04 IST Report Abuse
RAGOUBATHI அனைவருக்கும் விநாயக சதுர்த்தி தின நல் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Poochi Ram - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஆக-202209:05:43 IST Report Abuse
Poochi Ram அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X