சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்த வழக்கு: வேறு ஐகோர்ட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

Updated : செப் 02, 2022 | Added : செப் 02, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வேறு ஐகோர்ட்டில் மாற்ற கோரிய மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்தது.மேற்குவங்க கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் , திரிணமுல் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ., சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரிக்கும்
 
சுவேந்து அதிகாரி, வெற்றி, வழக்கு,  உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வேறு ஐகோர்ட்டில் மாற்ற கோரிய மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்தது.

மேற்குவங்க கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் , திரிணமுல் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ., சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரிக்கும் இடையே கடும் போட்டியில் இறுதியில் சுவேந்து அதிகாரியிடம் 1957 ஓட்டுகளில் மம்தா போராடி தோற்றார். இறுதியில், சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.


latest tamil news

நந்திகிராம் தொகுதியில் தோல்வியை ஏற்பதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவித்தார். எனினும் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் சுவேந்து அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நந்திகிராம் வெற்றியை எதிர்த்த வழக்கில் ஆளும் கட்சியின் தலையீடு, செல்வாக்கு ஆகியவற்றால் விசாரணை நியாயமாக இருக்காது. எனவே வழக்கை வேறு ஐகோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.

மனு விசாரித்த நீதிபதி கூறியது, இந்த வழக்கில் கோல்கட்டா உயர்நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லை என்ற எண்ணம் ஏற்படும். எனவே மனு தள்ளுபடிசெய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

03-செப்-202206:45:28 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ,,,,........
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
03-செப்-202206:23:52 IST Report Abuse
Dharmavaan இது பாரபட்சமமான தீர்ப்பு.அப்படியானால் ஜெயா வாழ்க்கை பெங்களூருக்கு மாற்றியது எப்படி.மற்ற வழக்குகளில் இந்த மாற்றம் செய்வதும் நம்பிக்கையில்லாததாலா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X