மும்பை: டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி , கார் விபத்தில் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணைக்கு மஹாராஷ்டிரா மாநில துணை முதல்வர் பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மும்பை அருகே பல்ஹர் பகுதியில் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது குறித்து அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இது தொடர்பாக போலீஸ் டிஜிபி உடன் பேசி உள்ளேன். விபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தும்படி அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பட்னாவிஸ் கூறியுள்ளார்.