ஹிந்து சமுதாயத்துக்கு எதிராக யுத்தம்: எச்சரிக்கை செய்கிறார் ஹெச்.ராஜா

Updated : செப் 05, 2022 | Added : செப் 05, 2022 | கருத்துகள் (45) | |
Advertisement
கோவை : ''ஹிந்து சமுதாயத்துக்கு எதிராக, எல்லா வகையிலும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஹிந்து தர்மத்தை, கலாசாரத்தை, பண்பாட்டை பாதுகாக்க வேண்டியது நம் கடமை,'' என, கோவையில் பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார்.ஹிந்து முன்னணி சார்பில், கோவை தெப்பக்குளம் மைதானத்தில் நேற்று நடந்த விநாயகர் சிலை விசர்ஜன பொதுக்கூட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவர்
ஹிந்து சமுதாயம், ஹெச் ராஜா, பாஜ, H Raja, BJP,Hindu Society,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up


கோவை : ''ஹிந்து சமுதாயத்துக்கு எதிராக, எல்லா வகையிலும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஹிந்து தர்மத்தை, கலாசாரத்தை, பண்பாட்டை பாதுகாக்க வேண்டியது நம் கடமை,'' என, கோவையில் பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார்.

ஹிந்து முன்னணி சார்பில், கோவை தெப்பக்குளம் மைதானத்தில் நேற்று நடந்த விநாயகர் சிலை விசர்ஜன பொதுக்கூட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியதாவது:சுதந்திரப் போராட்ட காலத்தில், தெய்வ பக்தி வாயிலாக, தேச பக்தி ஏற்படுத்தும் நோக்கத்துடன் விநாயகர் சதுர்த்தி விழாவை, சுதந்திர போராட்ட தலைவர் திலகர் நடத்த துவங்கினார்.நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து, 75 ஆண்டுகளாகி யுள்ள நிலையிலும், இவ்விழா நடத்துவதற்கு காரணங்கள் இருக்கின்றன.


latest tamil news


ஹிந்து விரோதிகள், தமிழகத்தில் சுதந்திரமாக திரிகின்றனர்.தமிழகத்தில், 39 ஆண்டுகளுக்கு முன், விநாயகர் சதுர்த்தி விழாவை பொது விழாவாக, ஹிந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நடத்த துவங்கினார்.ஹிந்து சமுதாயத்துக்கு இரண்டு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். வெளியில் இருந்து நடக்கும் மதமாற்றத்தாலும், உள்ளிருந்து எதிர்க்கும் ஹிந்து விரோதத்தாலும் அச்சுறுத்தல் இருக்கிறது.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத ஹிந்து விரோதியை, அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என, வீடு வீடாக சென்று வலியுறுத்த வேண்டும்.விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்துச் சொல்லாமல், மற்ற மதங்களின் விழாவுக்கு வாழ்த்துச் சொல்பவர் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது.

மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகின்றன; நாம் அசட்டையாக இருந்து விடக்கூடாது. ஹிந்து சமுதாயத்துக்கு எதிராக, எல்லா வகையிலும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
05-செப்-202218:59:56 IST Report Abuse
venugopal s இவர் மட்டும் பாஜகவிற்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வீடு வீடாகப் போனார் என்றால் பாஜகவுக்கு கிடைக்கும் நாலு ஓட்டும் கிடைக்காது.இவர் முகராசி அப்படி!
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
05-செப்-202212:38:18 IST Report Abuse
S.Baliah Seer இந்து மதத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.முதலாளிகளின் அடிவருடிகள் இதுபோல் கூப்பாடு போடுவது வயிற்றுப் பிழைப்புக்காக.
Rate this:
05-செப்-202215:19:13 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்மூர்க்கர்களைப் பொறுத்தவரை இந்து மதத்துக்கு எந்த பிரச்னையும் இல்லைதான் ........
Rate this:
Cancel
Chandra - Chennai,இந்தியா
05-செப்-202212:16:34 IST Report Abuse
Chandra சார் தமிழன்னுக்குக ஏதாவது நல்லது சென்சுட்டு பேசுங்க சார்.. நீங்களும் ..உங்க பிஜேபி யும், RSSம்..
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
05-செப்-202212:39:58 IST Report Abuse
தமிழ்வேள்தமிழன் குடிப்பது, சினிமா பார்ப்பது , மொபைல் நோண்டுவது , திமுக திக கும்பலுக்கு ஓட்டுபோடுவதை தவித்தால் , உதவி செய்வது பற்றி யோசிக்கலாம் ........
Rate this:
raja - Cotonou,பெனின்
05-செப்-202213:17:55 IST Report Abuse
rajaநல்லா படி கொத்தடிமையே.........
Rate this:
raja - Cotonou,பெனின்
05-செப்-202213:29:59 IST Report Abuse
rajaஇன்றைக்கு கூட மத்திய அரசின் வியாபார வண்டி திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டிய கோமாளியின் செய்தி வந்திருக்கு நல்லா படி கொத்தடிமையே........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X