பா.ஜ., மேலிடத்திற்கு பழனிசாமி தூது

Added : செப் 06, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க விரும்பும், அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி, அது தொடர்பாக பேச, புதுடில்லிக்கு துாது அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரத்தில், பழனிசாமிக்கு ஆதரவான சூழல் உருவாகியுள்ளது. பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், அக்கட்சி மேலிடத்திடம், பழனிசாமி மீண்டும்
பாஜ, அதிமுக, பழனிசாமி, லோக்சபா தேர்தல் 2024, BJP, AIADMK, Palanisamy, Lok Sabha Election 2024,

லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க விரும்பும், அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி, அது தொடர்பாக பேச, புதுடில்லிக்கு துாது அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரத்தில், பழனிசாமிக்கு ஆதரவான சூழல் உருவாகியுள்ளது. பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், அக்கட்சி மேலிடத்திடம், பழனிசாமி மீண்டும் நெருக்கம் காட்ட விரும்புகிறார்.


latest tamil news


அ.தி.மு.க., ஆட்சியின் போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் போன்றவர்களிடம், பழனிசாமி தரப்பினர் நெருக்கமாக இருந்தனர். அதே நெருக்கத்தையும், நட்பையும் மீண்டும் புதுப்பிக்கும் வகையில், பழனிசாமியின் துாதர்களாக, கொங்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர், புதுடில்லி
சென்றனர்.

இருவரும், பிரதமர் மோடிக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ஒருவரை சந்தித்து பேசியுள்ளனர்.இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. பன்னீர்செல்வம் அணி, கட்சி அமைப்பு ரீதியாக பலமாக இல்லை.பழனிசாமி அணியில் முழுக் கட்சியும் அடக்கம் என்ற தகவலை, பா.ஜ., மேலிடத்திடம், மத்திய உளவுத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மத்திய அமைச்சரை பழனிசாமியின் துாதர்கள் சந்தித்துள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24)

06-செப்-202216:54:46 IST Report Abuse
ராமகிருஷ்ணன் தமிழகத்தில் அதிமுக பி ஜே பி கூட்டணி ஆட்சி மலர வேண்டும்.
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
06-செப்-202212:30:45 IST Report Abuse
N.K கருணாநிதி மட்டும் இருந்திருந்தா, காங்கிரெஸ் கழட்டி விட்டுட்டு பழனிசாமிக்கு முன்னாடியே பாஜகவோட கூட்டணி வெச்சிருப்பாரு. அவருக்கு பதவிதான் முக்கியம். பாவம் அவருக்கு பிழைக்கத் தெரியாத பிள்ளையா போய்ட்டார் நம்ம முதல்வர்.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
06-செப்-202212:03:55 IST Report Abuse
venugopal s வாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக வாழ்ந்தவருக்கு சுதந்திரமான வாழ்க்கை வாழப் பிடிக்காது.
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
06-செப்-202212:26:54 IST Report Abuse
N.K திமுகவில் மட்டும் என்ன வாழுதாம்....
Rate this:
06-செப்-202213:46:30 IST Report Abuse
Ravichandran,Thirumayam ஆமா வாழ்நாள் பூரா அடுத்தவனை ஏமாற்றி சொத்துக்களை சேர்த்து பதவிக்கு வந்தும் கொள்ளையடிக்கும் உன் கட்டுமர கும்பல் போலன்னு சொல்லு அப்பதான் நல்லா புரியும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X