ராஜிவ் நினைவிடத்தில் ராகுல் மரியாதை

Updated : செப் 07, 2022 | Added : செப் 07, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
ஸ்ரீபெரும்புதூர்: பாதயாத்திரை துவங்குவதற்காக, தமிழகம் வந்துள்ள காங்கிஸ் எம்.பி., ராகுல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை ராஜிவ் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.ராகுல், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை , 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில், 150 நாட்கள், 3,570 கி.மீ., பாதயாத்திரையை இன்று துவக்குகிறார். இதற்காக நேற்று (செப்., 06) ராகுல் சென்னை

ஸ்ரீபெரும்புதூர்: பாதயாத்திரை துவங்குவதற்காக, தமிழகம் வந்துள்ள காங்கிஸ் எம்.பி., ராகுல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை ராஜிவ் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



latest tamil news


ராகுல், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை , 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில், 150 நாட்கள், 3,570 கி.மீ., பாதயாத்திரையை இன்று துவக்குகிறார். இதற்காக நேற்று (செப்., 06) ராகுல் சென்னை வந்தார்.



latest tamil news


யாத்திரையை துவங்குவதற்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவகத்திற்கு இன்று காலை 6:45 மணிக்கு வந்த ராகுல், ராஜிவ் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தார். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தினார். நினைவகத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டார். ராகுலுடன், தமிழக காங்., தலைவர் அழகிரி, செல்வப்பெருந்தகை, கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் வந்தனர்.


latest tamil news


பின், ராஜிவுடன் உயர்நீத்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார்.ஸ்ரீபெரும்புதுார் வந்த ராகுலுக்கு, காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


latest tamil news




நாட்டை இழக்க மாட்டேன்


latest tamil news

இதன் பின்னர் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: என் தந்தையை பிரிவினைவாத வெறுப்பு அரசியலுக்கு இழந்துவிட்டேன். என் நாட்டையும் அப்படி இழக்க மாட்டேன். அன்பு வெறுப்பை வீழ்த்தும். நம்பிக்கை அச்சத்தை தோற்கடிக்கும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெல்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

Vena Suna - Coimbatore,இந்தியா
07-செப்-202218:02:26 IST Report Abuse
Vena Suna இரண்டு கட்சிகளும் இன்னும் பத்து வருடங்களில் அழிந்து விடும். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
07-செப்-202214:37:43 IST Report Abuse
ராமகிருஷ்ணன் பேச்சில் உள்ள பெரிய மனுசத்தனம் செயல்பாட்டில் இல்லையே பப்பு. செயல்களில் முதிர்ச்சி இல்லை 🙅 என பாராளுமன்றத்தில் கண் அடிக்கும் போதே தெரிந்து விட்டது. 5 மாதம் பட்டாயா போக முடியாது. 50 கேரவன்கள் கூடவே வருதில்லே.. இது நடைபயணம் அல்ல கேரவன் ஊர்வலம். இன்னும் அதிக தொகுதிகளில் பி ஜே பி ஜெய்க்க உதவுவதற்கு மிக்க நன்றி பப்பு.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
07-செப்-202214:17:53 IST Report Abuse
Tamilnesan "என் நாட்டையும் அப்படி இழக்க மாட்டேன்" இந்தியாவை பிடித்த ராகுகாலம் எந்த நாட்டை இழக்க மாட்டேன் என்று தெளிவு படுத்தினால் நல்லது. இத்தாலியா, இந்தியாவா ? ஏனென்றால் இவர் பிப்டி பிப்டி பிஸ்கட் ரகத்தை சேர்ந்தவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X