தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து 2வது ஆண்டாக சரிவு

Updated : செப் 08, 2022 | Added : செப் 08, 2022 | கருத்துகள் (72) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் சதவீதம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ளது.இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுதும் ஜூலை 17ல் நடந்தது. அஸ்ஸாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுதும் 497 நகரங்களில்
தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து 2வது ஆண்டாக சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் சதவீதம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ளது.



இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுதும் ஜூலை 17ல் நடந்தது. அஸ்ஸாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுதும் 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.



தேர்வு எழுதிய 17.64 லட்சம் பேரில், 9.93 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்தில் 1.17 லட்சம் பேரும், மஹாராஷ்டிராவில் 1.13 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 82,548 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.



latest tamil news


தமிழகத்தை பொறுத்த வரை 1,32,167 பேர் தேர்வு எழுதியதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் சதவீதம் 51.3 ஆகும். கடந்த 2020ம் ஆண்டு 57.44 % ஆக இருந்த தேர்ச்சி விகிதம் 2021ம் ஆண்டில் 54.4% ஆக குறைந்தது. இந்த ஆண்டு 51.3 % ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையிலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.



இதனால், நீட் தேர்ச்சி பட்டியலில் கடந்த ஆண்டு 23வது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு 28 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.




கொரோனா பாதிப்பு

இது தொடர்பாக தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: கொரோனா பாதிப்புகளால் தான் நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த ஹைடெக் பயிற்சி வழங்குகிறோம் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (72)

09-செப்-202206:43:38 IST Report Abuse
பேசும் தமிழன் முதல் கையெழுத்து நீட் ரத்து... அடுத்த கையெழுத்து டாஸ்மாக் ரத்து என்று சொன்னார்கள்.. அந்த இரண்டுமே இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.. அப்போ எந்த திட்டமும் செயல்படுத்த வில்லையா? 70 கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று சொன்னது எல்லாம் பொய்யா கோபால்????
Rate this:
Cancel
09-செப்-202206:36:50 IST Report Abuse
பேசும் தமிழன் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களையும்.. நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்ய போகிறோம் என்று சொல்லி படிக்க விடாமல் செய்த இந்த அரசு தான் பொறுப்பு
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
09-செப்-202206:25:58 IST Report Abuse
Indhuindian உங்க அங்கலாய்ப்பு புரியுது அதனாலதான் நாங்க நீட் தேர்வே தமிஷகத்துக்கு வேணாம்ன்னு போராடறோமே நீட் தேர்வு ரத்துங்கறது குட்டிக்கரணம் பொட்டலும் நாடெங்க்காதுன்னு எங்களுக்கு தெரியும் ஆனா எங்க மக்கள் நாங்க சொல்றதை நம்பறாங்களே ஏமாறவங்க இருக்கும் வரிக்கும் ஏமாத்தறவங்களும் இருக்கதான் செய்வாங்க. எப்படியும் ரெண்டு மூணு தற்கொலைகள் இருக்கும் அதை வெச்சி இந்த வருஷத்தை ஒட்டிடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X