விரைவில் தமிழில் பேசுவார் கவர்னர்

Updated : செப் 11, 2022 | Added : செப் 11, 2022 | கருத்துகள் (38) | |
Advertisement
சென்னை: வழக்கமாக தமிழகத்தின் புதிய கவர்னராக யார் நியமிக்கப்பட்டாலும், 'நான் தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்' என சொல்வார். இரண்டு மாதங்களுக்கு பின் கவர்னரும் இதை மறந்துவிடுவார், மக்களும் மறந்துவிடுவர். ஆனால் தற்போதைய கவர்னர் ஆர்.என்.ரவி அப்படியல்ல. அவர் தீவிரமாக தமிழ் கற்று வருகிறாராம். மிக விரைவில் தமிழில் பேசும் அளவுக்கு, அவருக்கு 'கிராஷ் கோர்ஸ்'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: வழக்கமாக தமிழகத்தின் புதிய கவர்னராக யார் நியமிக்கப்பட்டாலும், 'நான் தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்' என சொல்வார். இரண்டு மாதங்களுக்கு பின் கவர்னரும் இதை மறந்துவிடுவார், மக்களும் மறந்துவிடுவர்.



latest tamil news


ஆனால் தற்போதைய கவர்னர் ஆர்.என்.ரவி அப்படியல்ல. அவர் தீவிரமாக தமிழ் கற்று வருகிறாராம். மிக விரைவில் தமிழில் பேசும் அளவுக்கு, அவருக்கு 'கிராஷ் கோர்ஸ்' கற்றுத் தரப்படுகின்றதாம்.இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல மக்கள் நல திட்டங்களின் விபரங்களையும், அதன் நன்மைகளையும் தமிழக மக்களுக்கு சரியான முறையில் யாரும் தெரிவிப்பதில்லை.


latest tamil news


சமீபத்தில் தெலுங்கானாவில் ஒரு ரேஷன் கடையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு மக்களுக்கு எவ்வளவு அரிசி வழங்குகிறது என்பதை விளக்கியதோடு, மாவட்ட கலெக்டரையும் ஒரு பிடி பிடித்தார்.இதே போல தமிழகத்திலும், கவர்னர் ரவி மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி அவர் போகும் இடங்களில் எல்லாம் தமிழில் பேச வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகின்றாராம்.

இதனால் தான் கவர்னர் அதிரடியாக தமிழ் கற்று வருகின்றாராம். இலக்கண சுத்தமாக தமிழ் பேச முடியாவிட்டாலும் ஏழை, எளிய மக்களுக்கு புரியும் தமிழில் பேசினால் போதும் என்கின்றாராம் பிரதமர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (38)

DVRR - Kolkata,இந்தியா
11-செப்-202218:40:12 IST Report Abuse
DVRR திருக்குறள் எப்படி அவமதிக்கப்பட்டது என்று கடைசி வரை செய்தியில் இல்லை. அவர் சொன்னது என்ன "The Tamil Nadu Governor said that the soul of devotion was deliberately removed in the Pope's Thirukkural Translation." இது எப்படிடா திருக்குறளை அவமதித்தாக ஆகும்?? போப்பின் தவறான அணுகுமுறையை விமர்சித்ததாக ஆகும்??? அவர் கிறித்துவனை அவமதித்து விட்டார் என்று போராட்டம் நடத்துகின்றார்கள் என்று ஆகின்றது இதனால். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருக்குறள் குறித்து பேசினார். அவர் திருக்குறளை அவமதித்ததாக குற்றம்சாட்டி பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
Rate this:
Stalin Soundarapandian - Al Jubaila,சவுதி அரேபியா
12-செப்-202214:09:19 IST Report Abuse
Stalin Soundarapandianஅத்தோடு நிறுத்தவில்லை. வேதங்களின் கருத்துக்களின் தொகுப்பு தான் திருக்குறள் என, குறளுக்குத் தனித் தன்மை இல்லாதது போலவும் பேசினார்....
Rate this:
Cancel
TRUBOAT - Chennai,இந்தியா
11-செப்-202218:38:59 IST Report Abuse
TRUBOAT தேசிய கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்.
Rate this:
Cancel
Stalin Soundarapandian - Al Jubaila,சவுதி அரேபியா
11-செப்-202218:10:40 IST Report Abuse
Stalin Soundarapandian ஒன்றிய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லணும்
Rate this:
Stalin Soundarapandian - Al Jubaila,சவுதி அரேபியா
12-செப்-202214:23:13 IST Report Abuse
Stalin Soundarapandianஒன்றிய அரசின் திட்டங்களை, தமிழக பாஜகவினர் மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியாதா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X