டெண்டர் முறைகேடு வழக்கு: பழனிசாமி கோரிக்கை நிராகரிப்பு

Updated : செப் 14, 2022 | Added : செப் 14, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை: நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும் வரை லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பழனிசாமி மீது
டெண்டர் முறைகேடு வழக்கு: பழனிசாமி கோரிக்கை நிராகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும் வரை லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.



நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி திமுக.,வின் ஆர்எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணை என்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.



latest tamil news

இந்நிலையில், டெண்டர் முறைகேடு வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும் வரை லஞ்ச ஒழிப்புத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முறைகேடு வழக்கில் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை, கமிஷனரிடம் உள்ளதாக கூறினார்.

இதனையடுத்து, பழனிசாமியின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க தடையில்லை எனக்கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
15-செப்-202202:44:02 IST Report Abuse
BASKAR TETCHANA ஆசிரியரும் வாசகர்களும் மன்னிக்கவும். என்னுடை பதிவில் பழனி என்று குறிப்பிடுவதற்கு பதில் பன்னிரு என்று தவறாக எழுதி விட்டேன். மன்னிக்கவும்.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
15-செப்-202202:40:23 IST Report Abuse
BASKAR TETCHANA அரசன் அன்று கொள்வான் இறைவன் நின்று கொள்வான். எல்லாம் உனக்காக தம்பி உனக்காக . இந்த பழமொழிகளை மறக்காதே பன்னிரு.
Rate this:
Cancel
தமிழன் - கோவை,இந்தியா
15-செப்-202200:54:19 IST Report Abuse
தமிழன் யோவ். நான் அவன் இல்லை...நான் கிட்டதட்ட பல வருசங்களா இந்த தமிழன் என்ற பெயரில்தான் என்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறேன்... மீண்டும் மீண்டும் சொல்கிறேன்...நான் அவன் இல்லை...என்னை விட்டுருங்க ப்பா சாமிகளா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X