தமிழகத்தை அதிர வைத்த சிறுமி பாலியல் வழக்கு: போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 21 பேர் குற்றவாளி

Updated : செப் 15, 2022 | Added : செப் 15, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை: வண்ணாரப் பேட்டையில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார், சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக
Chennai,  POCSO ,சென்னை, வண்ணாரப் பேட்டை,குற்றவாளிகள், போக்சோ, Vannarappet, Criminals,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: வண்ணாரப் பேட்டையில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.



சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார், சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பா.ஜ., பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான வெங்கட்ராம் (எ) அஜய் கண்ணண் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.



இதில் 22 பேரை கடந்த 21 நவம்பர் 2020 அன்று போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 26 பேர்களில், இரு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாகி விட்டனர். மீதமுள்ள 22 பேர்களில் மாரீஸ்வரன் என்பவர் விசாரணை காலக் கட்டத்தில் இறந்து விட்டார். மீதமுள்ள 21 பேர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.


latest tamil news


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தி, மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா (எ) கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ) அஜய் கண்ணண் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். மேலும் இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் 19ம் அறிவிக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட மாரி, பாஷா, முத்துபாண்டி மற்றும் மீனா ஆகியோர் தலைமறைவாகி விட்டதால் அவர்களுக்கு எதிரான வழக்கு தனியாக பிரித்து விசாரிக்கபடும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

K.n. Dhasarathan - chennai,இந்தியா
15-செப்-202223:03:53 IST Report Abuse
K.n. Dhasarathan நீதி அரசர்கள் தயவு செயது மிக கடுமையான தண்டனைகள் வழங்கணும், சும்மா பக்கத்துக்கு ஊருக்கு மாற்றலோ, அரசு ஊழியர் என்பதற்காக வெறும் கவுன்சிலிங் என்று விட்டுவிடாதிர்கள்
Rate this:
Cancel
jysen - Madurai,இந்தியா
15-செப்-202222:29:28 IST Report Abuse
jysen Scotland yard na summava?
Rate this:
Cancel
15-செப்-202220:18:25 IST Report Abuse
அருணா பப்ளிக்கா தூக்கு தண்டனை தரவேண்டும் அனிஸ்தீஷியா இல்லாமல் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் ஜெ அவர்கள் சட்ட சபையில் கூறினார் அப்போது தான் பாலியல் வக்ரபுத்தி காரர்களுக்கு பயம் வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X