பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து: நிதிஷ் குமார் விருப்பம்

Updated : செப் 16, 2022 | Added : செப் 15, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
பாட்னா: 2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் பாஜக அல்லாத கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்” என்று ஐக்கிய ஜனதா தள தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்பாட்னாவில் செய்தியாளருக்கு நிதிஷ் குமார் அளித்த பேட்டி: 2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில், பாஜக அல்லாத கூட்டணி
பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து: நிதிஷ் குமார் விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: 2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் பாஜக அல்லாத கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்” என்று ஐக்கிய ஜனதா தள தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்


பாட்னாவில் செய்தியாளருக்கு நிதிஷ் குமார் அளித்த பேட்டி: 2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில், பாஜக அல்லாத கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். புவியியல் ரீதியாகவும், சமூக பொருளாதார ரீதியாகவும் முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் மேம்பாட்டிற்காக சிறப்பு அந்தஸ்து வழங்கும் முறை 1969ல் அறிமுகப்படுத்தப்பட்டது.


இதன் மூலம், இந்த மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் வரி வருவாய், வளர்ச்சித் திட்டங்கள், அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை பெற்று வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.



latest tamil news



சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்கள்:


முதலில் அசாசம், நாகலாந்து, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. 1974 - 1979 காலகட்டத்தில் இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுா ஆகிய 5 மாநிலங்கள் இதில் சேர்க்கப்பட்டன. ஆந்திரா, பீஹார், ஒடிசா, ராஜஸ்தான், கோவா உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்தை கோரி வருகின்றன.


இதனையடுத்து 1990-ல் அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய இரு மாநிலங்கள் சேர்க்கப்பட்டன. 2001-ல் உத்தராகண்ட்டிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன்மூலம், நாட்டில் தற்போது 11 மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
16-செப்-202214:01:15 IST Report Abuse
கல்யாணராமன் சு. இந்த கணக்கிலே நிதிஷ் குமார் பீகாரை சேர்க்கமாட்டார் என நம்புவோம் .... ஏனென்றால், கனிம வளங்கள் நிறைந்த மாநிலம் அது ....ஆனால் அவை சென்றதெல்லாம் திருடர்களுக்குத்தான் ....
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-202207:07:27 IST Report Abuse
venugopal s பாஜக சங்கிகள் உத்தரப்பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்கள், ஏனென்றால் அங்கு பாஜகவின் ஆட்சி. எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என்றால் எதிர்ப்பார்கள். அவ்வளவு நல்லவர்கள், புத்திசாலிகள். ஆனால் நிதிஷ்குமார் தேர்தல் வாக்குறுதி கொடுப்பதில் திமுகவையே தோற்கடிப்பார் போல் உள்ளதே!
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
16-செப்-202212:29:15 IST Report Abuse
கல்யாணராமன் சு.11 மாநிலங்களில் 10 காங்கிரஸ் அரசால் கொடுக்கப்பட்டது.. உத்தரகண்ட் மத்திய பாஜக அரசால் காங்கிரஸ் மாநில அரசாக இருக்கும்போது கொடுக்கப்பட்டது.. இங்கே பாஜக சங்கிகள் எங்கே வந்தார்கள்? அறிவிலித்தனமாக கருத்திட்டு பரிசு வாங்குவதற்காக இங்கே உலவும் சில அறிவுஜீவிகளில் நீங்களும் ஒருவர் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன் .... வாழ்த்துக்கள் .......
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
15-செப்-202223:22:56 IST Report Abuse
C.SRIRAM முன்னேறிய மாநிலங்களுக்கு தலையில் துண்டா ?. வேலையை ஒழுங்காக பாருங்க . முன்னேறிய மாநிலத்திலிருந்து வரி வசூலித்து அதை உதவாக்கரை மாநிலங்களுக்கு உபயோகம் ?. இந்த நபர் நாட்டின் எதிரி .
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
16-செப்-202212:34:36 IST Report Abuse
கல்யாணராமன் சு.இது மாநிலங்களுக்கான சமூக நீதி என்று கொள்ளலாம் ... எப்படி மக்களில் பிற்படுத்தப்பட்டோர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சலுகைகள் பெறுகிறார்களோ, அது போல மாநிலங்களும் கோருகின்றன.. அது தவறென்று எனக்கு தோன்றவில்லை.. ஆனால் இந்த அந்தஸ்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும்.. இதை முன்னேறிய மாநிலங்களை ஏமாற்றுவதென்று கொள்ளக்கூடாது என்பது எனது கருத்து... இது ஒரு மாநிலத்துக்குள்ளேயே இருக்கும் தேவை கூட.. உதாரணத்துக்கு சென்னை கோவை முன்னேறிய மாவட்டங்கள்.... ராமநாதபுரம், சிவகங்கை பின்தங்கிய மாவட்டங்கள் .... அவையும் முன்னேற வேண்டும் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X