தொழில் முனைவோருக்கு அதிக கடன்: வங்கிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

Updated : செப் 16, 2022 | Added : செப் 16, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
மதுரை: தொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்கி தமிழகத்தின் சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.மதுரையில் நடந்த சிறு குறு நடுத்தர தொழில் துறை சார்பில் நடந்த மாநாட்டில் ரூ.1391 மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சிறு குறு நடுத்தர தொழில்களால் தான் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
stalin, mkstalin, ஸ்டாலின், முகஸ்டாலின், முதல்வர் ஸ்டாலலின், தொழில் முனைவோர், வங்கிகள், கடன், chiefminister, chiefminister stalin, banks, loan,

மதுரை: தொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்கி தமிழகத்தின் சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



latest tamil news

மதுரையில் நடந்த சிறு குறு நடுத்தர தொழில் துறை சார்பில் நடந்த மாநாட்டில் ரூ.1391 மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சிறு குறு நடுத்தர தொழில்களால் தான் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 தமிழகத்தை சேர்ந்தவை. மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு என 18 தமிழக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளன என்பதை பெருமையுடன் கூறுகிறேன். தமிழக பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளதால், அதிகளவு ஏற்றுமதி செய்ய முனைப்பு காட்ட வேண்டும்.


latest tamil news


தொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்கி தமிழகத்தின் சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். 2030க்குள் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைக்க தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கிறோம். எளிதாக தொழில் துவங்கும் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த தமிழகம் 3வது இடத்திற்கு முன்னேற வேண்டும்.




மாட்டுத்தாவணியில் டைடல் பூங்கா


latest tamil news

தொழில் முனைவோர் சொத்துக்களை வைத்து கடன் பெறும்போது உரிமை பத்திரம் ஒப்படைக்க வேண்டும் . இதற்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதே சொத்தின் மீது எத்தனை முறை கூடுதல் கடன் பெற்றாலும் மீண்டும் மீண்டும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் . இதனால் காலதாமதமும் வீண் அலைச்சலும் ஏற்படும். இதை தவிர்க்கும் வகையில் அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெற நினைத்தால் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை. ஆன்லைன் முறையில் எளிமையாக பதிவு செய்யலாம்.



latest tamil news

அறிவு சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் வகையில் மதுரை மாநகராட்சி மற்றும் டைடல் நிறுவனம் சார்பில் மாட்டுத்தாவணியில் ஐந்து ஏக்கரில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்கப்படும். இரண்டாவது கட்டமாக 5 ஏக்கரில் பூங்கா விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் புதிய தொழில் நிறுவனங்களுக்கு தரமான உள் கட்டமைப்பு வசதி வழங்கப்படும். பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். தொழில் வளர்ச்சி என்பது தொழில்கள் சார்ந்த வளர்ச்சி மட்டும் அன்று. பல்லாயிரம் குடும்பங்கள் வளர்ச்சி பெறும் . இதுவே மாநில வளர்ச்சி குறியீடு அதிகரிப்பதற்கும் உதவுகிறது என்றார்.


அமைச்சர்கள் அன்பரசன், மூர்த்தி, மகேஷ், தியாகராஜன் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

Vena Suna - Coimbatore,இந்தியா
16-செப்-202220:24:26 IST Report Abuse
Vena Suna அவங்க கடனை திரும்ப அடைக்கலைன்னா,உன் கிட்ட வசூல் பண்ணலாமா வங்கிகள்? எழுதி கொடுக்கறியா?
Rate this:
Cancel
16-செப்-202217:48:27 IST Report Abuse
அப்புசாமி சீக்கிரம் கடன் குடுங்க. அப்பதான் நாங்க மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்வோம்னு வாக்குறுதி குடுக்கலாம்.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
16-செப்-202217:33:15 IST Report Abuse
Soumya புரூடா விடியல் ஐயா கட்டுமர பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு கட்டிங் கமிஷன் ரூட் போட்டுட்டாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X