வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'தி.மு.க., அரசின் சர்வாதிகாரத்தனத்திற்கு, மக்கள் விரைவில் முடிவு கட்டுவர்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துஉள்ளார்.அவரது அறிக்கை:தொடர்ந்து ஹிந்துக்களை இழிவுபடுத்தும் வகையில்பேசி வரும்தி.மு.க.,- எம்.பி.,ராஜாவை, திறனற்ற தி.மு.க., அரசுகண்டிக்கவும் இல்லை;கைது செய்யவும் இல்லை.
![]()
|
வெறுப்பை உமிழும் ராஜாவை கண்டித்ததற்காக, கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை காவல் துறை கைது செய்துள்ளதை, தமிழக பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது.மத கலவரத்தை துாண்டும் வகையில்பேசி வரும் ராஜாவை கைது செய்யாமல், இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய, அவரது இழிவான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த,தமிழக பா.ஜ., மாவட்ட தலைவரை கைது செய்தது ஏன். தி.மு.க., அரசின் அடக்கு முறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்ச மாட்டோம். உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவுகட்டுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.