கும்மிடிப்பூண்டி--கும்மிடிப்பூண்டி அருகே, பொதிராங்குளம் கிராமத்தில், அரசு பள்ளி எதிரே உள்ள ஓடையில், சிலர் அத்துமீறி மணல் கடத்தலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.ஆரம்பாக்கம் போலீசார் நேற்று, அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த ஆசானபுதுார் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர், 32, மணிமாறன், 20, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.மணல் கடத்தலுக்கு அவர்கள் பயன்படுத்திய, ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.