முக்கிய வழக்கு விசாரணை செப்.,27 முதல் நேரடி ஒளிபரப்பு| Dinamalar

முக்கிய வழக்கு விசாரணை செப்.,27 முதல் நேரடி ஒளிபரப்பு

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (2) | |
புதுடில்லி :உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகள், செப்., 27 முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. உச்ச நீதிமன்றம் 2018ல் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தபோது, 'வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற என்.வி.ரமணா, தன் கடைசி பணி நாளில் முக்கியமான சில
முக்கிய வழக்கு விசாரணை  செப்.,27 முதல் நேரடி ஒளிபரப்பு

புதுடில்லி :உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகள், செப்., 27 முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. உச்ச நீதிமன்றம் 2018ல் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தபோது, 'வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது.



இந்நிலையில், தலைமை நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற என்.வி.ரமணா, தன் கடைசி பணி நாளில் முக்கியமான சில வழக்குகளை இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்தார். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில், புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கூட்டம் புதுடில்லியில் நடந்தது.


latest tamil news


இதில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகளை, செப்., 27 முதல் 'யு டியூப்' சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X