சென்னை: மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடர்பாக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசியதை புரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர் என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் முருகன் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கிறார்கள். பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கருத்து சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.
எய்ம்ஸ் ஆரம்ப கட்ட பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டது என்று தான் நட்டா கூறினார். அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.