புதுடில்லி: சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வோர் குறித்து 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இணையதளத்தில் சிறார் ஆபாச படங்களை பதிவிடுவோர், பகிர்வோர், பதிவிறக்கம் செய்வோரை சிபிஐ அமைப்பை சேர்ந்த சிறப்பு விசாரணை பிரிவினர் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரிலுள்ள இன்டர்போல் பிரிவு அளித்த தகவலின் பேரில் இன்று(செப்.,24) 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை தரவிறக்கம், பகிர்ந்தது தொடர்பாக சிபிஐ 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது.குற்றத்தில் ஈடுபட்ட மொத்த கும்பலையும் கூண்டோடு பிடிக்க 200 க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
