சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் எப்போது என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பெண் இனத்தையே அவமானப்படுத்தியுள்ளார் அமைச்சர் பொன்முடி. தேர்தலில் இதற்கான தாக்கம் நிச்சயம் இருக்கும். சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு அரசைக் கண்டு பயமில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு திராணி இல்லை.
திமுக அமைச்சர்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. ஜமீன்தார், குறுநில மன்னர்கள் போல் அவர்கள் செயல்படுகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.