ஆம்னி பஸ் கட்டணத்தால் ஏழைகளுக்கு பாதிப்பில்லை: அமைச்சர் கருத்து

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
சென்னை: ஆம்னி பஸ் கட்டணம் உயர்வால் ஏழைக்களுக்கு பாதிப்பு இல்லை என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து விடுமுறை தினம் என்பதால், வெளியூரில் தங்கி இருப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக பலரும் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். பண்டிகை
Omni Bus, Bus Fare, Sivasankar, Minister, DMK, Tamilnadu, ஆம்னி பஸ், பஸ் கட்டணம், உயர்வு, பாதிப்பு, அமைச்சர், சிவசங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஆம்னி பஸ் கட்டணம் உயர்வால் ஏழைக்களுக்கு பாதிப்பு இல்லை என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.



காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து விடுமுறை தினம் என்பதால், வெளியூரில் தங்கி இருப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக பலரும் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். பண்டிகை காலம் என்பதால் ஆம்னி பஸ்களில் பயணக்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.



latest tamil news

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆம்னி பஸ் கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிப்பது இல்லை. அரசு பஸ்களில் பயணிக்காதவர்கள், ஆம்னி பஸ் கட்டணத்தை தெரிந்துக் கொண்டே முன்பதிவு செய்து செல்கின்றனர். ஆம்னி பஸ்கள் சேவையின் அடிப்படையில் இயங்க முடியாது. அவர்களும் ஒரு தொழில் செய்கிறார்கள். கட்டணத்தை குறைக்க அறிவுறுத்தியதால் ஓரிரு நாட்களில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டண விவரத்தை அறிவிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (34)

28-செப்-202210:52:28 IST Report Abuse
அப்புசாமி ஆம்னி பஸ்ஸிலேயும் ஏழை எளிய மக்களுக்கு10 சதவீதம் இட ஒதுக்கீடு குடுத்துட்டா சரியாயிடும்.
Rate this:
Cancel
Shiva -  ( Posted via: Dinamalar Android App )
28-செப்-202205:28:16 IST Report Abuse
Shiva இவரெல்லாம் ஒரு அமைச்சர்... வெட்கக்கேடு... ஏழைகள், பணக்காரர்கள் பற்றி யோசிக்கும் தாங்கள் நடுத்தர வர்க்கம் பற்றி எப்பொழுது சிந்திப்பீர்கள்...
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
27-செப்-202223:26:45 IST Report Abuse
Mohan 10வருஷ ஆயாம்மா மந்திரிங்களையும் முந்திட்டாங்கப்பா ஒன்னரை வருஷ அறிவீலிய மந்திரிங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X