வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-'உண்மையான சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது' என, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.
மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ' எங்களைத் தான் உண்மையான சிவசேனா என அறிவிக்க வேண்டும்' என, ஏக்நாத் ஷிண்டே தரப்பு, தலைமை தேர்தல் ஆணையத்தில் சில ஆவணங்களை தாக்கல் செய்து மனு அளித்தது.
![]()
|
இந்நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்ட தாவது:சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான மனு, நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.எனவே, அதில் உத்தரவு வரும் வரை, சிவசேனா யாருக்கு சொந்தம் என்பது குறித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை அப்போதைய தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க தடை விதித்தது. உத்தவ் தரப்பு ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டது.
பின்இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இன்று நடந்த விசாரணையில், மொத்தம் 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் ஷிண்டே தரப்பிற்கு 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து உத்தவ் தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.