இரட்டை ஆண் குழந்தைகளைகழுத்தை நெரித்து கொன்ற பெண்| Dinamalar

இரட்டை ஆண் குழந்தைகளைகழுத்தை நெரித்து கொன்ற பெண்

Added : செப் 29, 2022 | |
போபால், ;மத்திய பிரதேசத்தில், பிறந்து 16 நாட்களே ஆன இரட்டை ஆண் குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற இளம்பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.ம.பி.,யின் போபால் நகரில் வசிப்பவர் சப்னா தாகத், 27. இவருக்கு திருமணமாகி, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், 16 நாட்களுக்கு முன், இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கடந்த 23ம் தேதி இரு குழந்தைகளையும் காணவில்லை என அவர் போலீசில் புகார் செய்தார்.

போபால், ;

மத்திய பிரதேசத்தில், பிறந்து 16 நாட்களே ஆன இரட்டை ஆண் குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற இளம்பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.ம.பி.,யின் போபால் நகரில் வசிப்பவர் சப்னா தாகத், 27. இவருக்கு திருமணமாகி, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், 16 நாட்களுக்கு முன், இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கடந்த 23ம் தேதி இரு குழந்தைகளையும் காணவில்லை என அவர் போலீசில் புகார் செய்தார்.



போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்த போது, சப்னா வின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.அவரிடம் தீவிரமாக விசாரித்த போது, ''கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வேலைக்கு செல்வதில்லை என்பதால், இந்தக் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவாய் என மாமியார் கேலி செய்தார். இதனால் கோபத்தில் இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டேன்,'' என சப்னா ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X