வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என, அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால், மும்பை, புதுடில்லி, சென்னை போன்ற முக்கியமான ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.
கூட்ட நெரிசலை குறைக்கவும், பயணியர் அல்லாதவர்களின் வருகையை குறைக்கவும், நடைமேடை கட்டணத்தை தற்காலிகமாக உயர்த்த, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில், அந்தந்த மண்டலங்கள் நடைமேடை கட்டணத்தை கணிசமாக உயர்த்தி அறிவித்து வருகிறது.
![]()
|
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில், நடைமேடை கட்டணம், வரும் 1ம் தேதி முதல் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
இந்த கட்டண உயர்வு, ஜன., 31ம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்பின், பழைய கட்டண முறை அமலுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.