காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள கல்வி மையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில், 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
காபூலின் மேற்கு பகுதியில் உள்ள தஷ்த் இ பர்சி என்ற இடத்தில் உள்ள அந்த மையத்தின் நுழைவுவாயிலில் தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவர்கள் 19 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல்கலையில் சேர்வதற்காக நடக்கும் நுழைவு தேர்விற்காக தயாராகி கொண்டிருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும், கல்வி மையம் மற்றும் மருத்துவமனைகளில் மாணவர்களின் பெற்றோர்கள் குவிந்தனர்.