வேலுார்: வேலுார் மாவட்டம், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கொணவட்டம் பகுதியில் இன்று காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுக்களை மக்கள் கும்பலாக சென்று எடுத்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வேலுார் வடக்கு போலீசார் அங்கு சென்று, சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.
அதில், அவை அனைத்தும் 500 ரூபாய் கலர் ஜெராக்சில் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுக்கள், மொத்தம் 14.50 லட்சம் இருந்தது தெரியவந்தது. அந்த பகுதியில் உள்ள கேமராவை ஆய்வு செய்ததில், காரில் வந்த நான்கு பேர் கள்ள நோட்டுக்களை சாலையில் வீசியதும், காற்றில் பறிந்த நோட்டுக்களை மக்களும், காரில் சென்றவர்களும் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.