கரூருக்கு புதிய மா.செ.,க்கள் பன்னீர்செல்வம் அறிவிப்பு

Added : அக் 02, 2022 | |
Advertisement
கரூர் மாவட்டத்தை, அமைப்பு ரீதியாக இரண்டாக பிரித்து, புதிய மாவட்ட செயலாளர்களை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நியமித்துள்ளார்.அ.தி.மு.க.,வின் ஒற்றை தலைமை விவாகாரத்தில், முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, பன்னீர் செல்வம் இடையே, மோதல் நீடித்து வருகிறது. இதனிடையே, இரண்டு தரப்பினரும், கட்சி நிர்வாகிகளை நீக்கியும், சேர்த்தும் வருகின்றனர்.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி,


கரூர் மாவட்டத்தை, அமைப்பு ரீதியாக இரண்டாக பிரித்து, புதிய மாவட்ட செயலாளர்களை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நியமித்துள்ளார்.
அ.தி.மு.க.,வின் ஒற்றை தலைமை விவாகாரத்தில், முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, பன்னீர் செல்வம் இடையே, மோதல் நீடித்து வருகிறது. இதனிடையே, இரண்டு தரப்பினரும், கட்சி நிர்வாகிகளை நீக்கியும், சேர்த்தும் வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, முன்னாள் முதல்வர் பழனிசாமி அ.தி.மு.க.,வின், இடைக்கால பொதுச்செயலாளராக நீடிக்க தடை இல்லை. இதனால், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கரூர், அரவக்குறிச்சி தொகுதிகள் அடங்கிய கரூர் மேற்கு மாவட்டத்துக்கு, இளங்கோ என்பவரை செயலாளராகவும், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதிகள் அடங்கிய கரூர் கிழக்கு மாவட்டத்துக்கு, டாக்டர் கதிரேசன் என்பவரை செயலாளராகவும், பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
மேலும், மேற்கு மாவட்ட அவைத்தலைவராக சுப்பிரமணியம், குளித்தலை நகர செயலாளராக அருண்மொழி தேவன், ஒன்றிய செயலாளராக செல்வராசு ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X