'ஜல் ஜீவன்' திட்டம்: தமிழகத்திற்கு மத்திய அரசு விருது

Added : அக் 03, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை: 'ஜல் ஜீவன்' திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கும், ஊரக சுகாதாரத்தில் முன்னேற்றம் அடைந்ததற்காகவும், தமிழகத்திற்கு, மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது. நாடு முழுதும் உள்ள வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 1.24 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க
Jal Jeevan Mission, Tamil Nadu, Jal Jeevan, TN, ஜல் ஜீவன், தமிழக அரசு, மத்திய அரசு, விருது, தமிழகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'ஜல் ஜீவன்' திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கும், ஊரக சுகாதாரத்தில் முன்னேற்றம் அடைந்ததற்காகவும், தமிழகத்திற்கு, மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.

நாடு முழுதும் உள்ள வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 1.24 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, 69.14 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய முதல் மாநிலமாக தமிழக அரசு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.



latest tamil news

இதற்கான விருதை, டில்லியில் நேற்று நடந்த துாய்மை பாரத விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பெற்றுக் கொண்டார். இதேபோல, ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை வாயிலாக, ஊரக பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் குறித்து அளவீடு செய்யப்படுகிறது.



அதன்படி, 2021- - 22ம் ஆண்டு தேசிய அளவில், ஊரக சுகாதாரத்தின் தரத்தில், தமிழகத்திற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. இதற்கான மத்திய அரசின் விருதை, ஜனாதிபதியிடம் இருந்து, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பெற்றுக் கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

vadivelu - thenkaasi,இந்தியா
03-அக்-202214:59:43 IST Report Abuse
vadivelu ஸ்டிக்கர் ஓட்டிக்க முடியாம பண்றீங்களே..
Rate this:
Cancel
Ramamurthy N - Chennai,இந்தியா
03-அக்-202213:37:15 IST Report Abuse
Ramamurthy N உன் வீட்டில் தண்ணீர் வேண்டும் என்றால் செலவழித்து தான் ஆகவேண்டும். எல்லாவற்றையும் இலவசமாக வழங்க வேண்டும் என்றால் எப்படி? வாசல்வரை தான் அரசு கொடுக்கும். ஆனால் இலவசத்தை கேலி செய்தால் எப்படி?
Rate this:
Cancel
cbonf - doha,கத்தார்
03-அக்-202213:07:12 IST Report Abuse
cbonf நீர் உற்பத்திக்கு முக்யத்வம் கொடுக்கப்படவேண்டும். வீட்டுக்கு வீடு போரிங் போட்டு நிலத்தடி நீரை காலி பண்ணிவிட்டோம் . ஆகையால் வீட்டுக்கு ஒரு கிணறும் ஒரு மழை நீர் சேகரிப்பு உபகரணமும் உண்டாக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X