காமராஜர் குறித்து அவதூறு பேச்சு: தி.மு.க.,வுக்கு காங்., கண்டனம்

Added : அக் 03, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
மதுரை : ''மறைந்த முதல்வர் காமராஜர் குறித்து தி.மு.க., மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி பேசியது கண்டனத்துக்குரியது,'' என, மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றிய வளாகத்தில் மஹாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு மட்டுமல்ல,
RS Bharathi, DMK, Manickam Tagore, Congress, காங்கிரஸ், திமுக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : ''மறைந்த முதல்வர் காமராஜர் குறித்து தி.மு.க., மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி பேசியது கண்டனத்துக்குரியது,'' என, மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றிய வளாகத்தில் மஹாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு மட்டுமல்ல, மக்களை பாதிக்கும் முடிவுகளை யார் எடுத்தாலும், காங்., எதிர்ப்பு குரல் கொடுக்கும்.



தமிழகத்தில் சொத்து வரி உயர்வு அறிவிப்பு வந்த போது, காங்., மாநில தலைவர் அழகிரி தான் முதன் முதலில் எதிர்த்தார். மறைந்த முதல்வர் காமராஜர் குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி பேசியது கண்டனத்துக்குரியது.



latest tamil news

கடந்த, 2019ல் மத்திய அரசு மதுரை விமான நிலைய ஓடுதளத்தை, 'அண்டர்பாஸ்' முறையில் செயல்படுத்த திட்டமிட்டனர். அதனால் கூடுதல் நிலங்கள் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டது.அதற்காக தான் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடக்காமல் இருந்தது. பட்ஜெட் அதிகரிப்பால் பழைய முறையிலேயே விரிவாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், மாநில அரசு, நிலங்களை ஒப்படைக்கவில்லை என, மத்திய அரசு கூறுகிறது.



மதுரை விமான நிலையத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது. 24 மணி நேர சேவை இல்லாததால் இரவு 9:00 மணிக்கு, நிலையம் மூடப்படுகிறது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை அதிகரிக்க வேண்டும் என, உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

sriram - Chennai,இந்தியா
03-அக்-202217:33:02 IST Report Abuse
sriram மாணிக்கம் தாகூர் அவர்களே, இன்னும் காமராஜரை எல்லாம் ஞாபகம் வச்சுகிட்டு இருக்கீங்களே பரவாயில்லையே. பெரியாரின் 21வது பக்கம் போல திமுக காரங்க யாராவது காமராஜரை பத்தி ஏதாவது எழுதி இருக்க போறாங்க ஜாக்கிரதை.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
03-அக்-202217:17:22 IST Report Abuse
Indhuindian நீங்கதான் எவ்வளோ அடிச்சாலும் தங்கறீங்களே அப்புறம் என்ன போட்டு தாக்க வேண்டியதானே.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
03-அக்-202216:21:30 IST Report Abuse
Rengaraj காங்கிரஸில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை. கட்டுக்கோப்பு இல்லை. ஓர் அமைப்பு ரீதியான சித்தாந்தம் இல்லை. ஆட்சியின் நிர்வாகத்தில் உள்ள குறைகளை எதிர்த்து கேள்வி கேட்க இவர்களுக்கு தைரியம் இல்லை. வழி நடத்த நல்ல தலைமை இல்லை. இவர்களால் ஒட்டு மொத்த தமிழகத்துக்கு எந்த நன்மையையும் இல்லை. ஆனால் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற லட்சியம் மட்டும் உள்ளதாக சொல்லிக்கொள்வதில் கூச்சப்படுவதில்லை. இவர்கள் மக்கள் தொண்டாற்ற தகுதி உள்ளவர்களா என்று அவர்களையே கேட்டுக்கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X