சென்னை: சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தை சேர்ந்த அலெக்ஸ் பினோய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியது.
வீடியோ வைரல்:
கடந்த 8ம் தேதி சென்னை அண்ணா சிலையில் இரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர் பைக் சாகத்தில் ஈடுபடும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. இது குறித்து சென்னை பாண்டிபஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பைக் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு பினோய்க்கு முன் ஜாமீன் வழங்கியது.
விழிப்புணர்வு பிரசாரம்:

இந்நிலையில், இன்று(அக்.,03) பைக் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டையில் நின்று கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அலெக்ஸ் பினோய் விநியோகம் செய்து
வாகன விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.