தூய்மை நகரங்கள் பட்டியலில் பின்னுக்குச் சென்றது கோவை!

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கோவை : மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், 2016ல், 'தூய்மை பாரதம்' இயக்கம் திட்டம் துவக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் துாய்மை பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்கள் மற்றும் மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படுகிறது.இந்தாண்டுக்கான ஆய்வு, 75வது சுதந்திர தின விழா நிறைவையொட்டி, துாய்மை அமிர்த பெரு விழாவாக நடத்தப்பட்டது; 4,354 நகரங்கள்
Clean India, Coimbatore, Swachh Survekshan,Kovai, தூய்மை இந்தியா, கோவை, தூய்மை நகரங்கள், Clean Cities,Smart City

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், 2016ல், 'தூய்மை பாரதம்' இயக்கம் திட்டம் துவக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் துாய்மை பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்கள் மற்றும் மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படுகிறது.



இந்தாண்டுக்கான ஆய்வு, 75வது சுதந்திர தின விழா நிறைவையொட்டி, துாய்மை அமிர்த பெரு விழாவாக நடத்தப்பட்டது; 4,354 நகரங்கள் பங்கேற்றன. மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களுக்கு விருது வழங்கும் விழா, சமீபத்தில் டில்லியில் நடந்தது. கோவை மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுள்ள நகரங்கள் பட்டியலில், கோவை மாநகராட்சி, 42வது இடத்தை பிடித்துள்ளது.



latest tamil news

2017ல் கோவை, 16வது இடத்தில் இருந்தது. ஆனால், 2018ல், 14 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, 40வது ரேங்க் பெற்றது. 2021ல் நடந்த தர வரிசையில், 46வது இடமே கிடைத்தது. தற்போது நான்கு இடங்கள் மட்டும் முன்னேறி, 42வது ரேங்க் பெற்றிருக்கிறது. இதன் மூலம் நமது நகரம் சுகாதாரத்தை பேணிக்காப்பதில் மிகவும் பின்தங்கியிருப்பது, வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.



latest tamil news

இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது: நாடு தழுவிய தர வரிசை பட்டியலில், 42வது இடம் பெற்றிருக்கிறோம்; 4 இடங்கள் முன்னேறி இருந்தாலும், இதற்கு முன், 16வது இடத்தில் இருந்திருக்கிறோம். கழிப்பறை பராமரிப்பு மோசமாக இருக்கிறது. மக்கள் கருத்து கூறுவதில் பின்தங்கியிருக்கிறோம்.



தரம் பிரித்து குப்பை சேகரிப்பதை மேம்படுத்த வேண்டும்.குப்பையில் உரம் தயாரிக்கும் மையத்தை செயல்படுத்துவது; கட்டட கழிவுகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.70 கோடிக்கு மதிப்பீடு தயாரித்திருக்கிறது. அடுத்த ஆண்டு, 20வது ரேங்கிற்குள் பெறும் அளவுக்கு திட்டங்கள் தயாரித்து, செயல்படுத்த முடிவு செய்திருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

05-அக்-202207:22:57 IST Report Abuse
அப்புசாமி கோவை ஸ்மார்ட் சிட்டி ஆயிடுச்சு.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-அக்-202205:49:08 IST Report Abuse
Kasimani Baskaran நூலகம் அமைத்தவுடனேயே மதுரைக்கு பரிசு கிடைத்து விட்டது. அடுத்த முறையாவது கோவைக்கு பரிசு கிடைக்கும் வகையில் அண்ணாவின் கண்ணாடி, மூக்குப்பொடி டப்பாவின் மாதிரிகளை நகல் எடுத்து காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைத்தால் சுற்றுலா வளரும் என்று சொல்லப்படுகிறது... ஒரு சிலர் பெரியார் மணியம்மை சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்களாம் - ஆனால் அதற்கு 21 ம் பக்கம் நினைவில் வரும் என்கிற படியால் அதை தவிர்க்கவேண்டும் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வாய் மொழியாக வேண்டாம் என்று உத்தரவிட்டார்களாம்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
05-அக்-202206:21:09 IST Report Abuse
Girijaஅறிவாலயத்தில் தெலுங்கன் சிலையை நிறுவ திமுகவிற்கு தைரியம் பகுத்தறிவு உள்ளதா?...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-அக்-202205:48:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்திய நகரங்களுக்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை. ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சக்கரைம்பாங்க.. இலுப்பைப்பூ கொஞ்சமாவது இனிக்கும். ஆனால் இவனுங்க சுத்தப்பட்டியல், இருக்குற நாத்தம் புடிச்ச குப்பையிலே எந்த குப்பை நல்ல குப்பைங்குற போட்டி தான். வெட்டியா பட்ஜெட் போட்டு திங்குறதுக்கு "ஸ்வச் பாரத்" ன்னு ஒரு ஆணி.
Rate this:
DUBAI- Kovai Kalyana Raman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-அக்-202208:18:45 IST Report Abuse
DUBAI- Kovai Kalyana Ramankadar, What about people in TN Or India, they are following rules and regulations for cleaning and debris disposal ..including you , put waste in the street only ..pass urine in street ..our people need self awareness and self discipline for cleaning and waste disposal and removal ..after only can blame our government .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X