வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகள் அமல்| Dinamalar

வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகள் அமல்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (7) | |
திருப்பூர் : வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், 'சர்வர் அப்டேட்' பணிகளால் ஏராளமான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன.வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு, சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில், புதிய நடைமுறையை ஏற்படுத்தி அரசாணை
வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகள் அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



திருப்பூர் : வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், 'சர்வர் அப்டேட்' பணிகளால் ஏராளமான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன.



வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு, சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில், புதிய நடைமுறையை ஏற்படுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழக அரசு, வாரிசு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக புதிய அரசாணை(எண்:478) வெளியிட்டுள்ளது.



latest tamil news

அதன்படி, புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதுவரை, இறந்தவரின் பெற்றோர், மனைவி அல்லது கணவர், மகன், மகள் (மகன் இறந்திருந்தால், மருமகள் மற்றும் பேரன், பேத்தி) வாரிசுகளாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.இனி, கணவர் அல்லது மனைவி, மகன் அல்லது மகள் மட்டுமே வாரிசாக அறிவிக்கப்படுவர். சான்றிதழில், உயிருடன் இருக்கின்றனரா அல்லது இறந்துவிட்டனரா என்று மட்டும் தெளிவாக குறிப்பிட தெரிவிக்கப்பட்டுள்ளது.



மகன் அல்லது மகள் இறந்திருந்தால், அவரது வாரிசுதாரர் தனியே வாரிசு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.திருமணம் ஆகாதவர் இறந்தால், தந்தை, தாய், சகோதரர், சகோதரிகள் வாரிசுகளாக அறிவிக்கப்படுவர். ஒருவர், ஏழு ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போயிருந்தால், கோர்ட்டில் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.



இதற்காக 'சர்வர் அப்டேட்' பணிகள் நடப்பதால், விண்ணப்பங்கள் தேக்கம் அடைந்துள்ளன. விரைவில், சீரமைக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும்.வாரிசுகள், 18 வயதுக்கு குறைவாக இருந்தால், அவர்களின் பாதுகாவலர் அல்லது இறந்தவரின் சகோதரர் அல்லது சகோதரிகள் விண்ணப்பிக்கலாம்.



தாசில்தார் வழங்கிய வாரிசு சான்று தொடர்பாக, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதன்பின், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X