தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல: ஸ்டாலின்
தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல: ஸ்டாலின்

தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல: ஸ்டாலின்

Added : அக் 05, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை:''தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல; ஆன்மிகத்தை அரசியலுக்கும், சுயநலத்திற்கும் மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது,'' என, வள்ளலார் முப்பெரும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.வள்ளலாரின் 200வது பிறந்த நாள்; அவரது தர்மசாலை துவக்கத்தின் 156 ஆண்டு; அவர் ஏற்றிய தீபத்தின் 152 ஆண்டு ஆகியவற்றை, முப்பெரும் விழாவாக, அறநிலையத்துறை ஓராண்டிற்கு கொண்டாட
தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல: ஸ்டாலின்

சென்னை:''தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல; ஆன்மிகத்தை அரசியலுக்கும், சுயநலத்திற்கும் மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது,'' என, வள்ளலார் முப்பெரும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


வள்ளலாரின் 200வது பிறந்த நாள்; அவரது தர்மசாலை துவக்கத்தின் 156 ஆண்டு; அவர் ஏற்றிய தீபத்தின் 152 ஆண்டு ஆகியவற்றை, முப்பெரும் விழாவாக, அறநிலையத்துறை ஓராண்டிற்கு கொண்டாட உள்ளது.


அதன் துவக்க விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.அன்னதான திட்டம்விழாவில், வள்ளலார் முப்பெரும் விழா 'லோகோ' மற்றும் அஞ்சல் உறை, விழா மலர், முதல் வார விழா, ஆண்டு முழுதும் அன்னதானத் திட்டம் ஆகியவற்றை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:


ஈ.வெ.ரா., பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும், அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்த தி.மு.க., அரசு, வள்ளலார் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்துள்ளது.


வள்ளலார் தொடர்பான முப்பெரும் விழாவை நாம் நடத்துவது சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். சிலர் சொல்லும் அவதுாறுக்கு பதில் கூறும் விழா இது. தி.மு.க., ஆட்சி ஆன்மிகத்திற்கு, மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று, மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலர் கூறி வருகின்றனர்.தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல;, அதை அரசியலுக்கும், சுயநலத்திற்கும், உயர்வு தாழ்வு கற்பிக்கவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது.


கோட்டைக்கு வருவதை விட கோவில்களுக்கு அதிகம் செல்பவர் அமைச்சர் சேகர்பாபு. ஆன்மிக செயற்பாட்டாளரான அவர், அறப்பணிகள் முறையாக நடக்கிறதா என்பதை அதிகம் கவனித்து வருகிறார். அறநிலையத் துறைக்கு அவர் ஆற்றும் பணியை மக்கள் பாராட்டுவது தான் சிறப்பு.


வள்ளலாரை போற்றுவது திராவிட ஆட்சியின் கடமை. ராமலிங்கர் பாடல் திரட்டு நுாலை, 1940ம் ஆண்டில் ஈ.வெ.ரா., வெளியிட்டார். வள்ளலார் நகரை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.முப்பெரும் விழாதேர்தல் அறிக்கையின் படி, வடலுார் வள்ளலார் சர்வதேச மையத்தை, 100 கோடி ரூபாயில் அமைப்பது குறித்து, வல்லுனர் குழு ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அதற்கான வரைவு திட்டப்பணி நடந்து வருகிறது.


வள்ளலார் முப்பெரும் விழா, 52 வாரங்கள் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது. ஓராண்டிற்கு தொடர் அன்னதானம், பேச்சாளர்களுக்கு சன்மானம் உள்ளிட்ட தேவைக்கு, 3.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.தன் கொள்கைக்காக சமரச சன்மார்க்க சங்கம் துவக்கியவர் வள்ளலார். பசிப்பிணி தவிர்த்தார். அவரின் வழி நடக்கும் இந்த அரசு, பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டுள்ளது.


பசிப்பிணி போக்குதலும், அறிவு பசி நீக்குவது இந்த அரசின் முதன்மை கொள்கை. இவ்வாறு முதல்வர் பேசினார்.விழாவில், அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், சுப்பிரமணியன், எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்.எல்.ஏ., வேலு, விழாக்குழு தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்திருந்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (16)

Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-அக்-202223:22:52 IST Report Abuse
Matt P திமுக ஆன்மீகத்துக்கு எதிரானது அல்ல. நானும் என்க அப்பா கனிமொழியும் தான் திமுகவில் ஆன்மீகவாதி அல்ல. திமுகவில் சேகரு ராஜன் இன்னும் எவ்வளவோ பேர் கோயிலுக்கு நீறு பூசி வேஷம் கட்டி கோயிலுக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க. தப்பு செய்தாலும் சாமியை வணங்கினால் தண்டனை கிடைக்காது என்ற நம்பிக்கை தான்.நான் செய்த தப்புகளுக்கு ஏன் மனைவியை கோயில்களுக்கு அனுப்பி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.எல்லாம் அந்த தக்ஷிணாமூர்த்தி செயல்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
07-அக்-202209:46:40 IST Report Abuse
sankar உங்கள் ஆட்சி யாருக்கு எதிரானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக எல்லாருக்கும் தெரியும் சார்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07-அக்-202205:20:04 IST Report Abuse
NicoleThomson உங்களுக்கு சமூக நீதி என்னவென்றே தெரியாது முதல்வரே , ஒரு சாராரய் இழிவு படுத்திய ராசா வேண்டுமானால் உங்களுக்கு மின்துறை கட்டண அதிகரிப்புக்கு உதவியிருக்கலாம் ஆனால் அவர் கூறிய வார்த்தை உங்களின் , உங்கள் தந்தையின் உங்கள் மூதாதையரின் பிறப்பை கேள்விக்குறியாகியுள்ளது , இன்று தான் நீங்க சில நாள் பாய் ஆகவும் சில நாள் பேராயர் ஆகவும் இருக்கீங்க ஆனால் கண்டிப்பாய் உங்க மூதாதையர் இந்து மதத்தைத்தான் பின்பற்றியுள்ளனர் அப்போது ராசா சொன்ன வார்த்தை உங்களின் குடும்பத்திலேயே பொருந்தி வந்திருக்குமே? அவரை கண்டிப்பதில் உங்களுக்கு என்ன கடினமான வேலை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X