சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று இன்று (அக்.6ம் தேதி) ஒரே நாளில் 404பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![]()
|
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் இன்று (அக்.6ம் தேதி) 404 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,85,831 ஆக அதிகரித்துள்ளது. அக்.6 505 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,42,712ஆக உயர்ந்து உள்ளது.இன்று ( அக்.6 ) கோவிட் பாதிப்பால் உயிரிழப்பு இல்லை. இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 38,047 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு நேற்று (அக். 5 ம் தேதி ) 92 ஆக இருந்த நிலையில் இன்று(அக். 6 ம் தேதி) சென்னையில் 91 ஆக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட வாரியாக விபரம் வருமாறு
![]() ![]()
|
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement